திண்டுக்கல், ஏப்.24- திண்டுக்கல்லில் மலைக்கோட்டையை சுற்றி நடைபெறும் கிரிவலத்தை மக்க ளவை பாமக வேட்பாளர் திலகவாமா தொடங்கி வைத்தார் திண்டுக்கல்லில் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமி மற்றும் பௌர்ணமி அன்றும் கிரிவலம் போவதாக கூறிக்கொண்டு பாஜக சங் பரிவார கும்பல் தொடர்ந்து ஏதாவது பதற்றம் ஏற்படுத்துவதற்கு முயற்சி செய்து வருகின்றன. அவ்வாறு முயற்சி செய்யும் போது எல்லாம் போலீசார் தடுத்து நிறுத்து வது வழக்கமாக இருந்து வருகிறது இந் நிலையில் இந்த முறை பாஜக மற்றும் இந்து முன்னணியை சேர்ந்தவர்கள் கிரிவலத்தை நடத்த முடிவு செய்தனர். இந்து முன்னணி யின் தலைவர் காடேஸ்வர சுப்பிரமணி தலைமையில் நடைபெற்ற கிரிவலத்தை திண்டுக்கல் மக்களவைத் தொகுதி பாமக வேட்பாளர் திலகவாமா தொடங்கி வைத்தார். ஏற்கனவே திண்டுக்கல் பதற்றம் நிறைந்த பகுதியாக உள்ளது இந்நிலை யில் பாமகவும் பாஜகவும் சங்பரிவார கும்ப லும் சேர்ந்து உள்ளூரில் பதற்றத்தை ஏற் படுத்துவதற்காக இது போன்ற கிரி வலத்தை பயன்படுத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். அதற்கு திலகபாமா துணை போகலாமா என்ற கேள்வியை திண்டுக்கல் மக்கள் எழுப்புகிறார்கள் திண்டுக்கல் மலைக்கோட்டையை சுற்றி இஸ்லாமிய மக்களும் கிறிஸ்தவ மக்க ளும் வசிக்கிறார்கள் அவர்களிடம் பதற்றம் ஏற்படுத்துவதற்காக பாமக வேட்பாளர் இப்படி செய்யலாமா என்று மக்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.