திருச்சிராப்பள்ளி, நவ.12 - மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் பகுதிக் குழு 9 ஆவது மாநாடு செவ்வாயன்று ஸ்ரீரங்கத்தில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தோழர்கள் நந்தகுமார், விஜயா, வீர முத்து ஆகியோர் தலைமை வகித்தனர். மாநாட்டு கொடியை மூத்த தோழர் இலக்குவன் ஏற்றினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ். ஸ்ரீதர் துவக்க உரை யாற்றினார். மாவட்டக் குழு உறுப்பினர் சந்தானம் வாழ்த்துரை வழங்கினார். ஸ்ரீரங்கம் திருவானைக் காவல் பகுதியில் கோவில் நிலத்தில் குடியிருக்கும் அனைவருக்கும் பட்டா வழங்க தமிழக அரசு உடன டியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். ஸ்ரீரங்கம், திருவானைக்கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணி களுக்கு வாகனங்கள் நிறுத்த ஒருங்கிணைந்த பார்க்கிங் வசதி செய்து தர வேண்டும். ஸ்ரீரங்கம் அரசு மருத்துவ மனையை தரம் உயர்த்தி, மருத்துவமனையில் போதுமான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள், உதவி யாளர்களை நியமிக்க வேண்டும். ஸ்ரீரங்கம் செக் போஸ்ட் அழகிரிபுரத்தில் புதி தாக கட்டப்பட்டுள்ள தடுப் பணை தரம் இல்லாததை மேல்கட்ட ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். உடைந்த தடுப்பணையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஸ்ரீரங்கம் பகுதி செய லாளராக பி.தர்மா உள்பட 9 பேர் கொண்ட பகுதிக் குழு தேர்வு செய்யப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலா ளர் ஆர்.ராஜா நிறைவுரை யாற்றினார். முன்னதாக பகுதிக்குழு உறுப்பினர் ரகுபதி வரவேற்றார். பகுதிக் குழு உறுப்பினர் சுப்பிரமணி நன்றி கூறினார்.