districts

img

மின் வாகனங்கள் பயன்பாடு விழிப்புணர்வு பிரச்சாரம்

பாபநாசம், ஜன.6 - இந்திய எரிசக்தித் துறை, தமிழக மின் வாரியத்துடன் இணைந்து, சுற்றுச்சூழலை காக்கும் பொருட்டு, பொதுமக்கள் மின்சார வாகனங்களை அதிகளவில் பயன்படுத்த வேண்டும் என தொடர் பிரச்சாரங்களில் ஈடு பட்டு வருகின்றன.

 இதனொரு பகுதியாக தஞ்சை மின் பகிர்மான வட்டம் மற்றும் கும்பகோணம் வடக்கு கோட்டம் சார்பில் மின்சார வாகனங் களின் பயன்பாடு குறித்த விழிப்புணர்வு பிரச் சார ஊர்தி பயணம் அய்யம்பேட்டை பேருந்து  நிறுத்தம் அருகே துவங்கியது.  ஊர்தியை தமிழ்நாடு மின்வாரிய கும்பகோ ணம் செயற்பொறியாளர் கலையரசி கொடி யசைத்து தொடங்கி வைத்தார்.

இதைத் தொடர்ந்து பொது மக்களிடம் விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.