பாபநாசம், ஜன.19- தமிழக அரசு கால்நடை பரா மரிப்புத் துறை சார்பில் சிறப்பு கால்நடை மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. பாபநாசம் அடுத்த கபிஸ்த லம் அருகே சத்தியமங்கலத்தில் நடைபெற்ற முகாமிற்கு பாபநா சம் சட்டமன்ற உறுப்பினர் ஜவா ஹிருல்லா தலைமை வகித்தார். இதில் பாபநாசம் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவி சுமதி, திமுக பாபநாசம் வடக்கு ஒன்றி யப் பொறுப்பாளர் தாமரைச் செல்வன், ஒன்றியக் கவுன்சிலர் சுரேஷ், ஊராட்சி மன்றத் தலை வர் செல்வராஜ், கால் நடை உதவி மருத்துவர்கள் ஆதனூர் சரவணன், சுவாமிமலை சிவக் குமார், கபிஸ்தலம் வடிவேலன் உள்பட பங்கேற்றனர். முகாமில் கால் நடைகளுக்கு பொது சிகிச்சை, குடற்புழு நீக்கம், ஆண்மை நீக்கம், சினை ஊசி, சினை பரிசோதனை நடை பெற்றது. தாது உப்பு கலவை வழங்கப்பட்டது. முகாமில் சிறந்த கிடறி கன்றை வளர்ப்பவர்க ளுக்கு 3 பரிசுகளும், சிறந்த கால் நடை விவசாயிகளுக்கு 3 கேட யங்களும் வழங்கப்பட்டன.