அகில இந்திய மாநில கூட்டுறவு வங்கி இணையத்தால் சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூரில் நடைபெற்ற விருதுகள் வழங்கும் விழாவில், அகில இந்திய அளவில் சிறந்த சங்கத்திற்கான முதல் பரிசு, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா எம்எம்137 ஆலவயல் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்திற்கு வழங்கப்பட்டது. இதற்கான கேடயம் மற்றும் சான்றினை சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், புதுக்கோட்டை மண்டல இனண பதிவாளர் உமாமகேஸ்வரி, சங்க தலைவர் பழனிச்சாமி, துணைத் தலைவர் நிஜார்அலி, சங்க செயலாளர் பழனிச்சாமி மற்றும் சரக மேற்பார்வையாளர் சீனிவாசன் ஆகியோரிடம் வழங்கினார்.