districts

img

ஏவிசி கல்லூரிக்கு ‘ஏ பிளஸ்’ கிரேடு

மயிலாடுதுறை,  ஏப். 21 - மயிலாடுதுறை அருகே மன்னம்பந்தல் ஏவிசி தன் னாட்சி கல்லூரிக்கு தேசிய தர நிர்ணயக் குழுவின் முதன்மை அந்தஸ்தான ‘ஏ  பிளஸ்’ கிரேடு கிடைத்துள் ளது.  இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் ஆர்.நாக ராஜன் கூறுகையில், மத்திய  அரசின் தேசிய தர நிர்ண யக் குழுவினர் (நேக்)  கல்லூரிகளில் உள்கட்ட மைப்பு வசதி, மாணவர் களுக்கு கற்பிக்கப்படும் கல்வித்திறன், வேலை வாய்ப்பு பயிற்சிகள், பேராசி ரியர்களின் தரம் ஆகிய வற்றை ஆய்வு செய்து  தரச்சான்று வழங்குகின்றனர். உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள  ஹிம்கிரி ஜீ பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் டாக்டர் எஸ்.சி.பாக்ரி தலைமையில், குஜராத் மாநிலத்தின் நாலெட்ஜ் கன்சார்சியம் முன்னாள் இயக்குனர் டாக்டர் நரேந்திர சோட்டாலியா, ஜம்மு காஷ்மீரில் உள்ள இஸ்லாமியா அறிவியல் மற்றும் வணிகவியல் கல்லூரி முதல்வர் டாக்டர் ஷேக் அஜாஸ் பஷீர் ஆகியோர் கொண்ட குழுவினர், ஏப்ரல் 11,12 ஆகிய தேதிகளில் கல்லூரியை நேரில் வந்து ஆய்வு செய்தனர்.  இதில் கல்லூரியின் உள்கட்டமைப்பு வசதி, பேரா சிரியர்களின் தரம், மாண வர்கள் மற்றும் பெற்றோர் களின் கருத்துகளை ஆய்வு  செய்தனர். இதில் எங்கள் கல்லூரிக்கு தேசிய தர  நிர்ணயக் குழுவின் முதன்மை அந்தஸ்தான ‘ஏ பிளஸ்’ (3.46/4.00) கிரேடு கிடைத்துள்ளது. தேசிய தர நிர்ணயக் குழு நான்காவது முறையாக இங்கு ஆய்வு மேற்கொண்டு தர நிர்ண யம் செய்திருப்பது குறிப்பிடத் தக்கது என்றார்.  இதற்காக அர்ப்பணிப்பு உணர்வோடு பணியாற்றிய பேராசிரியர்கள், ஆசிரியர் அல்லாத பணியாளர்கள், மாணவர்களை ஏவிசி கல்வி நிறுவனங்களின் நிர்வாக அதிகாரியும் சென்னை உயர்  நீதிமன்றத்தின் முன்னாள்  நீதிபதியுமான கே.வெங்கட் ராமன் பாராட்டினார்.