திருச்சிராப்பள்ளி, மார்ச் 19 - சிஐடியு திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை தொடக்க விழா மண்ணச் சநல்லூர் எதுமலை பிரிவு சாலை யில் செவ்வாயன்று நடைபெற்றது. விழாவிற்கு ஆட்டோ நிலைய தலைவர் ஞானசேகர் தலைமை வகித்தார். விழாவில் சங்க கொடியை சிஐடியு புறநகர் மாவட்டச் செயலா ளர் சிவராஜ் ஏற்றி வைத்து சிறப்புரை யாற்றினார். சங்க பெயர் மற்றும் தகவல் பலகையை திருச்சி புறநகர் மாவட்ட ஆட்டோ சங்க மாவட்ட செய லாளர் சம்பத், சீனிவாசன் ஆகியோர் திறந்து வைத்தனர். ஆட்டோ சங்க மாவட்ட பொருளாளர் சந்திரசேகர் வாழ்த்துரை வழங்கினார். விழாவில் சிபிஎம் மண்ணச்சநல்லூர் மேற்கு ஒன்றிய செயலாளர் மனோகரன், முறைசாரா சங்க ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பூமாலை உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஹக்கீம் நன்றி கூறினார்.