தஞ்சாவூர், ஜன.25 - கல்விக் கடனில் 18 வயது நிரம்பியவர்களுக்கு உத்தரவாத கையொப்பமிடும் முறையை ரத்து செய்வது தொடர்பாக தமிழக முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி.செழி யன் தெரிவித்தார். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை மாலை நடைபெற்ற உயர்கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கான கல்விக் கடன் வழங்கும் முகாமில் பங்கேற்று 185 பேருக்கு, ரூ.7.90 கோடிக்கான காசோலைகளை வழங்கிய அவர் மேலும் பேசியதாவது: இந்திய அளவில் உயர் கல்வியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. இது திடீரென ஏற்பட்ட வளர்ச்சி அல்ல; முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 35 ஆண்டு கால முயற்சியால் நிகழ்ந்தது. கிராமப்புற மாண வர்களுக்கு 15 சதவீத இடஒதுக்கீடு, நுழைவுத் தேர்வு ரத்து, முதல் தலைமுறை பட்ட தாரியாக இருந்தால் 5 மதிப்பெண்களை அரசே வழங்குவது போன்றவற்றை செயல் படுத்தினார். இதன் மூலம் தற்போது உலக நாடுகளுடன் போட்டி போடும் வகை யில் தமிழ்நாடு உயர் கல்வியில் இருப்ப தற்கு கருணாநிதியும், தமிழக முதல்வர் ஸ்டா லினும்தான் காரணம். கல்விக் கடன் பெறுவதில் 18 வயது நிரம்பாதவர்களுக்கு யாராவது ஒருவர் உத்தரவாத கையொப்பம் அளிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நடைமுறை 18 வயது நிரம்பியவர்களுக்கும் உத்தரவாத கை யொப்பம் இடும் நிலை உள்ளது. 18 வயது நிரம்பியவர்கள் முழு மனிதன் என்பதால், இந்த உத்தரவாத கையொப்பம் தேவை என்பது எந்த வகையில் நியாயம் என்றும், முதல்வரிடம் கலந்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் கூறிய கருத்தை, கோரிக்கையாக ஏற்று தமிழக முதல்வருக்கும், நிதித் துறை அமைச் சருக்கும் கடிதம் எழுதி, உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும். இதைச் செயல் படுத்தும்போது உயர் கல்வித் துறை இன்னும் மேன்மை அடைவதற்கு வாய்ப்பாக அமையும். இவ்வாறு அவர் பேசினார். இதில், மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா பங்கஜம், துணை ஆட்சியர்கள் (பயிற்சி - உத்கர்ஷ் குமார், சங்கரநாராயணன், தஞ்சா வூர் தொகுதி மக்களவை உறுப்பினர் ச.முர சொலி, சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு), டி.கே.ஜி. நீலமேகம் (தஞ்சாவூர்), துணை மேயர் அஞ்சுகம் பூபதி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தஞ்சை மண்டல முதுநிலை மேலாளர் வெங்க டசுப்பிரமணியன், முன்னோடி வங்கி மேலா ளர் பிரதீப் கண்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.