districts

img

வெங்கடேஸ்வரா பள்ளியில் வாசிப்போர் மன்றம் துவக்க விழா

புதுக்கோட்டை,  ஜூலை 1-

    புத்தகங்கள் மாண வர்களுக்கு புதிய சிறகுகளைத் தரும் என்றார் தமிழ்நாடு அறி வியல் இயக்கத்தின் மாநிலச் செயலாளர்  எஸ்.டி.பாலகிருஷ் ணன்.

    புதுக்கோட்டை ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் “வாசிப் போர் மன்றம்” தொடக்க விழா சனிக்கிழமை நடைபெற்றது.  

    விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட பாலகிருஷ்ணன் பேசுகையில், “நோ புக் டே” எனும் புத்தகமில்லா தினம்  கொண்டாடி பாடப் புத்தங்களைத் தாண்டி  பல்வேறு நூல்களை வாசிக்கும் பழக்கத்தை மாணவர்களிடம் ஏற்படுத்தியது இப்பள்ளி. இன்று தமிழகத்திலேயே முதன் முதலாக “வாசிப்போர் மன்றம்” தொடங்கிய பெரு மையை கொள்கிறது. தொடர்ந்து எல்லா மாணவர்களும் நூல்களை வாசிப்பதிலும், படித்ததில் பிடித்ததை விவாதிப்பதிலும் கலந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் மாணவர்களுக்குப் புதிய சிறகுகளைத் தரும்  என்றார்.

    விழாவிற்கு பள்ளியின் முதல்வர் கவிஞர்  தங்கம்மூர்த்தி தலைமை வகித்தார். வாசிப் போர் மன்றத்தின் தலைவராக அ.அ. அட்சயா, துணைத் தலைவர்களாக உ.உதய ரிஷனியா, செயலாளர் உ.ஷீபா, மா.ஸ்ரீ வர்சன், துணைச் செயலாளர்களாக மா.ரோ கித், ச.தாரிகா ஆகியோர் தேர்வு செய்யப்பட் டனர். பல்வேறு தலைப்பிலான நூல்களுக்கு  மாணவர்கள் மதிப்புரை வழங்கினர்.  முன்னதாக ஒருங்கிணைப்பாளர் கோமதி பிள்ளை வரவேற்க, தமிழாசிரியர் கணியன்  செல்வராஜ் நன்றி கூறினார். நிகழ்வை ஆசி ரியர் உதயகுமார் தொகுத்து வழங்கினார்.

    பள்ளியின் துணை முதல்வர் குமாரவேல், வழக்கறிஞர் செந்தில்குமார், கல்வித்துறை கணேஷ், மகாத்மா ரவிச்சந்திரன், பேரா சிரியர் கருப்பையா உள்ளிட்டோர் பங்கேற்ற னர்.