districts

திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தில் சரக்கு முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தம் விமான நிலைய இயக்குநர் தர்மராஜ் அறிவிப்பு

திருச்சிராப்பள்ளி, ஜன.8 - திருச்சி பன்னாட்டு விமான நிலையத்தி லிருந்து துபாய், ஷார்ஜா, குவைத், மலே சியா, கொழும்பு மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடு களுக்கு சர்வதேச விமானங்கள் இயக்கப் பட்டு வருகின்றன. நாளொன்றுக்கு சுமார் 20 முதல் 24 உள்நாடு மற்றும் வெளிநாடு விமான சேவைகள் உள்ளன. விமான நிலையத்தில் செயல்படும் சரக்கு முனையத்தில் திருச்சி மற்றும் சுற்று வட்டார மாவட்டங்களில் விளையும் பூக்கள்,  காய்கறிகள், பழவகைகள் தினமும் குறைந்த பட்சம் 20 முதல் 25 டன் சரக்கு கையாளப் படுகிறது. இதன் காரணமாக நாளொன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.50 முதல் ரூ.60 லட்சம் வரையிலான சரக்குகளை விமான நிறுவ னங்கள் கையாள்கின்றன. தற்போது நிர்வாக காரணங்களுக்காவும், ஊழியர்கள் பற்றாக்குறை காரணமாகவும், இந்திய விமான நிலைய ஆணையம், ஏற்று மதியாளர்களை விமான நிலையத்திற்கு சரக்குகளை கொண்டு வர வேண்டாம் என்று  கேட்டுக் கொண்டுள்ளது.

இதனைக் கருத்தில்  கொண்டு ஜன. 9 ஆம் தேதி முதல் சரக்கு  முனைய சேவை தற்காலிகமாக நிறுத்தப்படு கிறது. மறு திறப்பு தேதி பின்னர் அறி விக்கப்படும் என திருச்சி பன்னாட்டு விமான  நிலைய இயக்குநர் தர்மராஜ் தெரிவித்து உள்ளார். ஆனாலும் இங்குள்ள பூ, பழம், காய்கறி  ஏற்றுமதியாளர்கள், இயக்குனரின் இந்த ஆணையால் தாங்கள் பெரும் நஷ்டத்தை சந்திக்க வேண்டியிருக்கும். பண்டிகை காலத்தை கருத்தில் கொண்டு   சரக்கு முனை யத்தை மூடக் கூடாது. சரக்குகளை வழக்கம் போல் கையாள வேண்டும். அவ்வாறு இல்லை என்றால் பெருத்த நஷ்டத்தை நாங்கள்  சந்திக்க நேரிடும். எனவே சரக்கு முனை யத்தை உடனடியாக மூடும் உத்தரவை திரும் பப் பெற வேண்டும் என கோரிக்கை விடுத் துள்ளனர்.