districts

தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்தில் கட்டுமானப் பணிகள்: எம்எல்ஏ ஆய்வு

மயிலாடுதுறை, ஜூலை 31 - மயிலாடுதுறை மாவட் டம் தரங்கம்பாடியில் மீன் பிடித் துறைமுகம் அமைக் கும் பணியை பூம்புகார் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா எம்.முருகன் சனிக்கிழமை பார்வையிட்டு ஆய்வு மேற் கொண்டார். தரங்கம்பாடியில் ரூ.177  கோடி செலவில் மீன்பிடித்  துறைமுகம் அமைக்கப் பட்டு வருகிறது. இந்த துறை முகத்தில் 800 பைபர் படகு கள், 225 எந்திர படகுகள் மற்றும் கட்டுமரங்கள் நிறுத்தும் வசதி, சேமிப்புக் கிடங்கு, மீன் இறங்கு தளம்,  ஏலக்கூடம், படகுகள் பழுது பார்க்கும் இடம், ஓட்டல்கள் மற்றும் ஏடிஎம் மையம், கடைகள், கழிவறைகள், சுகாதார மையம் உள்ளிட்ட பல்வேறு வசதிகளுடன் அமைக்கப்படவுள்ளது. இந்நிலையில் மீன்பிடி துறைமுகம் அமைக்கும் பணியை பூம்புகார் தொகுதி  சட்டப்பேரவை உறுப்பினர் நிவேதா முருகன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார். அப்போது பணிகள் மற்றும் அவற்றின் முன்னேற்றம் குறித்து கேட்ட றிந்தார். கடலில் கருங்கற் களை கொண்டு அமைக்கப்பட் டுள்ள தடுப்பு சுவர், சாலை அமைக்கும் பணியை பார்வையிட்டு மீன்பிடித் துறைமுகம் அமைக்கும் பணிகளை குறித்த காலத் திற்குள் முடிக்க அறிவுறுத்தி னார்.  அவருடன் மீன்வளத் துறை செயற்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி, உதவி செயற்பொறியாளர் ரவீந்தி ரன், தரங்கம்பாடி பேரூ ராட்சி மன்ற உறுப்பினர் சுகுணசங்கரி, துணை தலை வர் பொன்.ராஜேந்திரன், மீனவ  பஞ்சாயத்தார்கள் இருந்த னர்.

;