திருச்சிராப்பள்ளி, ஜூலை 28-
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மகத் தான தலைவர்களில் ஒருவரும், உழைக்கும் மக்களின் ஒப்பற்றத் தலைவரும், கிராமப்புற மக்களை அணிதிரட்ட அயராது பாடுபட்டவ ருமான மறைந்த தோழர் கே.வரதராசன் நினைவரங்கம் திறப்பு விழா மற்றும் பொதுக்கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புறநகர் மாவட்டக் குழு திரு வெறும்பூர், பத்தாளப்பேட்டை கிளைகள் சார்பில் நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்டக்குழு உறுப்பினர் முருகேசன் தலைமை வகித்தார். தோழர் கே. வரதராசன் நினைவரங்கத்தை கந்தர்வ கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்ன துரை, கல்வெட்டை புறநகர் மாவட்ட செயலா ளர் ஜெயசீலன் ஆகியோர் திறந்து வைத்த னர்.
விழாவில் மாவட்ட செயற்குழு உறுப்பி னர் நடராஜன், ஒன்றியச் செயலாளர் மல்லிகா, மாவட்டக்குழு உறுப்பினர் தெய்வநீதி, விவ சாயிகள் சங்க ஒன்றிய துணைத்தலைவர் சங்கிலிமுத்து, ஒன்றியக்குழு உறுப்பினர் கள் கணேசன், அன்பழகன், மகேந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். கிளைச் செயலாளர் ரெத்தினபாண்டியன் நன்றி கூறினார்.