districts

img

முத்துப்பேட்டை ரஹ்மத் பள்ளியில் தமிழ் தாத்தா உ.வே.சா இலக்கிய மன்ற விழா

முத்துப்பேட்டை, ஆக.18 -

     தமிழ் தாத்தா உ.வே.சாமிநாதஅய்யர் (உ.வே.சா) இலக்கிய மன்ற 18-வது ஆண்டு விழா திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை ரஹ்மத் பெண்கள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

     பள்ளியின் முதன்மை முதல்வர் சு.சகுந்தலா தலைமை வகித்தார். பள்ளி யின் நிறுவனர் முஸ்தபா, முன்னாள் காவல் கண்கா ணிப்பாளரும் பள்ளி தாளாள ருமான எஸ்.ஆர்.ஜே. இந்திர ஜித்மு ன்னிலை வகித்தனர்.  பள்ளி முதல்வர் டிசோசா வர வேற்றார். மாணவர்களின் வளர்ச்சி மற்றும் வெற்றிக்கு பெரிதும் துணைபுரிவது நாடா? வீடா? என்ற தலைப் பில் நடைபெற்ற பட்டிமன்றத் திற்கு,  திருச்சி தேசிய கல்லூரியின் தமிழ்த்துறை இணை பேராசிரியர் சா. நீலகண்டன் நடுவராக பங் கேற்றார்.

      மாணவிகளுக்கு கவிதை, கட்டுரைப் போட்டி கள் நடத்தப்பட்டன. இதில் வென்ற மாணவியருக்கு நகைச்சுவை நாவலர் எஸ். மோகனசுந்தரம் பரிசுத் தொகை வழங்கி பாராட்டி னார். நிகழ்ச்சியை தமிழாசிரி யர் ச.ஜென்னி தொகுத்து வழங்கினார். மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் நடை பெற்றன. தமிழாசிரியர் ச. குருப்ஸ்காயா நன்றி கூறி னார்.