districts

img

கொள்ளிடம் சோதனைச்சாவடியில் மின் விளக்கு, கேமரா அமைக்கப்படுமா?

மயிலாடுதுறை, ஜன.22 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் சோதனைச் சாவடியின் சாலையோர மின் விளக்குகள் எரியாத தால், இரவு நேரங்களில் அப்பகுதி இருண்டு காணப்படு கிறது. கடலூர் மாவட்டத்தின் தெற்கு எல்லையும், மயி லாடுதுறை மாவட்டத்தின் வடக்கு எல்லையும் சந்திக்கும்  இடத்தில் கொள்ளிடம் ஆற்றுப்பால முடிவில், சோத னைச்சாவடி அமைந்துள்ளது. இது 24 மணி நேரமும் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இங்கு சாலையோரம் உள்ள மின் கம்பத்தில் கடந்த  மூன்று மாதங்களுக்கு மேலாக மின்விளக்கு எரிய வில்லை. அதனால் இப்பகுதி இருண்டு காணப்படு கிறது. ஆற்றுப்பாலத்தின் ஓரத்தில் பொருத்தப்பட்டு உள்ள மின் கம்பங்களில் அமைக்கப்பட்டுள்ள, மின்  விளக்குகளில் பல விளக்குகள் எரிவதில்லை. இதனால்  வாகன தணிக்கை மற்றும் கண்காணிப்பு பணியில் ஈடு படும் போலீசாருக்கு  சிரமம் ஏற்படுகிறது.  மேலும் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த  சோதனைச்சாவடி அமைந்துள்ள பகுதியில் செயல்பட்டு  வந்த கண்காணிப்பு கேமராக்களும் தற்போது இல்லை. எனவே கொள்ளிடம் சோதனைச் சாவடியில் சக்தி வாய்ந்த மின் விளக்குகளை பொருத்தி ஒளிரச் செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமராக்களை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.