districts

img

கந்தர்வகோட்டையில் கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி

புதுக்கோட்டை, ஏப்.18-  

    உலக பாரம்பரிய தினத்தை முன்னிட்டு வரலாற்றுச் சின்னங்களை பாதுகாப்பதை வலியுறுத்தி பேரணி-கல்வெட்டு வாசிப்புப் பயிற்சி புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

   கந்தர்வகோட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளி தொன்மைப் பாதுகாப்பு மன்றத் தின் சார்பில் நடைபெற்ற பேரணியை தலைமை ஆசிரியர் வெ.பழனி துவக்கி வைத் தார். கந்தர்வகோட்டை சிவன் கோவிலில் உள்ள கல்வெட்டுகளை வாசிப்பதற்கான பயிற்சியை தொன்மை பாதுகாப்பு மன்ற ஒருங்கிணைப்பாளர் ஆ.மணிகண்டன் வழங்கினார்.

   சிவன் கோவில் கருவறைத் தூணில் உள்ள பத்தாம் நூற்றாண்டு கல்வெட்டு, முன் மண்டபக் கல்லில் உள்ள 13-ஆம் நூற்றாண்டு  கல்வெட்டு, தூண்களில் உள்ள 14, 15-ஆம்  நூற்றாண்டு கல்வெட்டுக்களில் உள்ள எழுத்துரு மாறுபாடு குறித்தும், அதனை வாசிப்பது குறித்தும் மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டது.

   கல்வெட்டுக்களை படியெடுப்பதற்கான பயிற்சியும் வழங்கப் பட்டது. நிகழ்வில் உதவித் தலைமை ஆசிரியர் எம்.சீனிவாசன், நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பாளர் எம்.சீனிவாசன், முன்னாள் ஊராட்சிமன்றத் தலைவர் கவிதா சிவா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.