districts

img

அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வானியல் பயிற்சி பட்டறை

திருச்சிராப்பள்ளி, டிச.17 - தமிழ்நாடு அஸ்ட்ரானமி அண்ட் சயின்ஸ் சொசை ட்டி-டாஸ், தமிழ்நாடு அறி வியல் மற்றும் தொழில்நுட்ப மையம் சென்னை, இந்திய வானியற்பியல் நிறுவனம் (IIA-பெங்களூரு), திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரி (தன் னாட்சி) ஆகியவை இணைந்து, அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கான ஒரு நாள் வானியல் பயிற்சி பட்ட றையை நடத்தின. திருச்சி பிஷப் ஹீபர் கல்லூரியில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையை டாஸ்  மாநில பொதுச் செயலாளர் ஜெ.மனோகர் துவக்கி வைத்தார். திருச்சிராப்பள்ளி சமக்ர சிக்ஷா - உதவி திட்ட அலுவலர் அன்புசேகரன் வாழ்த்துரை ஆற்றினார். ‘வானவியல் ஒரு அறி முகம்’ என்ற தலைப்பில் கனவு ஆசிரியர் சு.உமா,  ‘வானியல் அதிசயங்கள்’ என்ற தலைப்பில் டாஸ்  மண்டல ஒருங்கிணைப்பா ளர் ஜெயபால், ‘வானியலில் பெண்கள்’ என்ற தலைப்பில்  முன்னோடி பெண்மணி தி. சாந்தி, ‘கோள்களின் இயக் கம்’ என்ற தலைப்பில் பிஷப்  ஹீபர் கல்லூரி அறிவியல் புல உதவி முதன்மையர் முனைவர் ஜோஸ்பின் பிரபா  ஆகியோர் பயிற்சி அளித்த னர். பிளானட் பெஸ்டிவல் -  2024 குறித்து கலந்துரை யாடப்பட்டது.  வட்டார கல்வி அலுவ லர்கள் இரா.ஜெயலட்சுமி, க. மருதநாயகம், பிஷப் ஹீபர்  கல்லூரி டீன் ஆப் சயின் சஸ் முனைவர் வயலட்  தயாபரன் ஆகியோர் அனைத்து பங்கேற்பாளர் களுக்கும் சான்றிதழ்கள்  வழங்கினர்.  நிகழ்ச்சி ஏற்பாடுகளை ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆசிரி யர் ஆரோக்கியராஜ் செய் தார். இந்த ஒரு நாள் வானி யல் பயிற்சி பட்டறையில் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் 35 பேர் கலந்து கொண்டனர்.