districts

img

உதவி மின்பொறியாளர் பணியிடை நீக்கத்தை கண்டித்து ஆர்ப்பாட்டம்

திருச்சிராப்பள்ளி, மார்ச் 9- உதவி மின்பொறியாளர் கிருஷ்ணமூர்த்தி பணி  இடைநீக்கம் செய்யப்பட் டதை கண்டித்தும், பணி இடைநீக்க உத்தரவை உடனே ரத்து செய்வதுடன், அதே இடத்தில் அவரை பணியமர்த்த வேண்டும் என வலியுறுத்தி திருச்சி  பெருநகர தமிழ்நாடு மின்  வாரிய தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழு சார்பில் தென்னூரில் உள்ள மின்வாரிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கூட்டுக்குழு தலைவர் ரெங்க ராஜ் தலைமை வகித்தார். பொறியாளர் சங்க மண்டல செயலாளர் விக்ரமன், பொறியாளர் கழக நிர்வாகி நரசிம்மன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.