districts

img

சாலை, கழிப்பறை வசதி கேட்டு சிபிஎம் ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை டிச-26,  மயிலாடுதுறை மாவட் டம் செம்பனார்கோவில் அரு கேயுள்ள நரசிங்கநத்தம் ஊராட்சியில் அடிப்படை வசதிகளை செய்துத்தரக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் சார்பில் கடலி பாலம் அருகில் கட்சியின்  கிளை செயலாளர் எஸ்.சுந்  தர்ராஜன் தலைமையில் ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  ஊராட்சிக்குட்பட்ட மேலத்தெருவில் தார்சாலை அமைத்திட வேண்டும், சாமி யாங்குன்னம், நரசிங்க நத்தம் நடுத்தெரு, மேலத் தெரு உட்பட்ட கிராமத்தில் புதிய சாலைகளை அமைக்க வேண்டும், ஊராட்சியில் உள்ள நடுநிலைப்பள்ளியில் கழிவறை உள்ளிட்ட சுகாதார வசதிகளை செய்துக் கொடுக்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலி யுறுத்தி நடைபெற்ற ஆர்ப்  பாட்டத்தில் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.சீனி வாசன், மாவட்டச் செயற் குழு உறுப்பினர் டி.சிம்சன், மாவட்டக்குழு உறுப்பினர் காபிரியேல் உள்ளிட்டோர் உரையாற்றினர்.  போராட்டத்தையறிந்த அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தி பிப்ரவரி மாதத்திற்குள் கோரிக்கை களை நிறைவேற்றுவதாக எழுத்துப்பூர்வமாக உறுதி யளித்ததையடுத்து போராட் டத்தை தற்காலிகமாக கை விட்டனர்.