districts

img

பெண்களை பாதுகாக்க சிறப்பு சட்டம் கேட்டு...

பயிற்சி பெண் மருத்துவரை கொடூரமாக பாலியல் வன்புணர்வு செய்து படுகொலை செய்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும், ஒன்றிய, மாநில அரசுகள் பெண் மருத்துவர்களை பாதுகாக்கும் வகையில் சிறப்பு சட்டம் இயற்ற  வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கம் செங்கல்பட்டு அரசு கலைக் கல்லூரி கிளைசார்பில் மாவட்ட குழு உறுப்பினர் சத்திய தாஸ் தலைமையில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கல்லூரி நிர்வாகிகள் வருண், மோகன், வரதராஜ், தீபக், ஜெபஸ்டின் உள்ளிட்ட ஏராளமான மாணவர்கள் பங்கேற்றனர்.