தஞ்சாவூர், ஆக.8-
ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி ஆபரேட்டர்கள், தூய் மைப் பணியாளர்கள், தூய்மைக் காவலர்கள், டெங்கு கொசு ஒழிப்பு தொழிலாளர்கள் ஆகியோர் தஞ்சாவூர் ஆட்சி யர் அலுவலகம் முன்பு ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத் தின் மாவட்டச் செயலர் இ. இமானுவேல் தலைமை வகித் தார். சிஐடியு மாநிலச் செயலர் சி.ஜெயபால் கோரிக்கை விளக்கவுரையாற்றினார். தரைக்கடை, ஆட்டோ சங்க மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கம் (சிஐடியு) சார் பில் நடைபெற்ற இந்த ஆர்ப் பாட்டத்தில், ஊராட்சிகளில் பணிபுரியும் மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டி ஆபரேட்டர் கள், தூய்மைப் பணியாளர்க ளைப் பணி நிரந்தரம் செய்து, சிறப்பு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.
பணி ஓய்வு பெறுவோருக்கு பணிக்கொடை, ஓய்வூதியம் வழங்க வேண்டும். ஊராட்சிகளில் பணிபுரி யும் தூய்மைப் பணியாளர் களுக்கு, குறைந்த பட்சம் மாதம் ரூ.10 ஆயிரம் ஊதியம் வழங்க வேண்டும். தூய்மைக் காவலர் களுக்கு அரசு அறிவித்துள்ள மாத ஊதியம் ரூ. 5 ஆயிரத்தை அனைத்து ஊராட்சிகளிலும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தினர்.