மன்னார்குடி, ஆக.11 -
விளைந்த வயலிலும் வரப்பிலும் செருப்பு அணிந்து நடப்பதே குற்ற மாக கருதப்படும் வேளாண் வாழ்வியல் முறையில், பச்சைப் பசேல் என்றிருக்கும் விளைந்த வயல்களுக்கு இடையே இறந்தவர்களின் சவ ஊர்வலம் நீண்ட காலம் நடந்து வருகிறது.
திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மகா தேவப்பட்டி னத்தில்தான் இந்த அவலம் நீண்ட கால மாக அரங்கேற்றப்பட்டு வரு கிறது. தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் திருவாரூர் மாவட்ட குழு சார்பாக, திரு வாரூர் மாவட்ட ஆட்சியரை நேரடியாக சந்தித்து இது குறித்து கோரிக்கை மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தீண் டாமை ஒழிப்பு முன்ன ணியின் மாவட்டச் செயலா ளர் கே.தமிழ்மணி செய்தியா ளர்களிடம் கூறுகையில், “மன்னார்குடி வருவாய் வட்டம் மகாதேவப்பட்டினம் ஊராட்சிக்குட்பட்ட மேல பேட்டை தெருவில் 25 குடும் பங்கள் தலைமுறை தலை முறையாக வசித்து வரு கின்றன. இந்தக் குடும்பங் களுக்கு இறந்தவர்களை எரி யூட்டுவதற்கான இடம், இவர்கள் வசிப்பிடத்தி லிருந்து பல கிலோமீட்டர் தொலைவில் உள்ளது.
சுடுகாட்டுக்குச் செல்ல சாலை வசதி இல்லை. எனவே இறந்தவர்களின் உடல்களை பாடையோடு தூக்கிக் கொண்டு வயல் களுக்கு நடுவே நெடுந்தூ ரம் சென்று, கரை ஏறி எரி யூட்ட வேண்டிய அவல நிலை உள்ளது. தெரு மின் விளக்கு, குடிமனைப் பட்டா, அரசால் கட்டித் தரப்படும் வீடுகள், கழிவறை போன்ற எந்த அடிப்படை வசதி களும் இல்லை.
அறிவியல் உலகில், இந்த குடும்பங்கள் தனித் தீவாக வாழ்ந்து வருகின்றன. இந்தப் பிரச்சனைகள் குறித்து, திருவாரூர் மாவட்ட ஆட்சியரை தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பாக நேரில் சந்தித்து கோரிக்கை மனு அளித் தோம். மனுவைப் பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், இந்தப் பிரச்சனைகளை தீர்க்க விரைவி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித் துள்ளார்” என்றார்.