நாகர்கோவில், ஆக 23
குமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஹரிகிரண் பிரசாத் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்ப தாவது: தமிழகம் முழுவதும் 2023-ம் ஆண்டுக்கான துணை ஆய்வாளர் (ஆண் மற்றும் பெண்) பதவிகளுக்கான முதன்மை தேர்வு வருகிற 26-ந் தேதி காலை 10 மணி முதல் பகல் 12. 30 மணி வரை நடைபெற உள்ளது. மொழி தகுதித் தேர்வு மதியம் 3. 30 மணி முதல் மாலை 5. 10 மணி வரை நடக்கிறது. இந்த தேர்வை குமரி மாவட்டத்தில் 3 ஆயிரத்து 844 பேர் எழுத உள்ளனர். இதற்காக மொத்தம் 4 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
அதாவது நாகர்கோவில் பார்வதிபுரம் பொன்ஜெஸ்லி என்ஜினீயரிங் கல்லூரி, இறச்சகுளம் அமிர்தா இன்ஸ்டி டியூட், சுங்கான்கடை புனித சேவியர் என்ஜினீயரிங் கல்லூரி, தோவாளை சி. எஸ். ஐ. இன்ஸ்டிடியூட் ஆகிய 4 மையங்க ளில் தேர்வு நடைபெற உள்ளது. விண்ணப்பதாரர்கள் தேர்வு அன்று காலை 8 மணி முதல் தேர்வு மையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். தேர்வு கூட அனுமதி சீட்டில் குறிப்பிட்டுள்ள தேர்வு மையத்தில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவார்கள்.
தேர்வுக்கான அழைப்பு கடிதம் கிடைக்காத விண்ணப்ப தாரர்கள் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணைய இணையதளமானwww.tn.gov.in /tusen.com என்ற இணையதளத்திலிருந்து அழைப்பு கடித நகல் எடுத்து தேர்வு மையத்திற்குள் கொண்டு வர வேண்டும். மேலும் விவரங்களுக்கு 04652-220167 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.