districts

img

அருண்மொழிதேவன் கிராம இளைஞர்கள் 35 பேர் மார்க்சிஸ்ட் கட்சியில் இணைந்தனர்

மயிலாடுதுறை, ஜூன் 30-  மயிலாடுதுறை மாவட்டம் நீடூர் அருகிலுள்ள அருண்மொழிதேவன் கிராமத்தில் 35 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியில் தங்களை  இணை த்துக்கொண்டனர்.  அருண்மொழிதேவன் ஊராட்சி அலுவலகம் அருகில் நடைபெற்ற விழாவிற்கு கிளைச் செயலாளர் ரஞ்சித் தலைமை வகித்தார். மாநி லச் செயற்குழு உறுப்பினர் கே.சாமு வேல்ராஜ் கட்சியின் கொடியினை ஏற்றி வைத்து புதிதாக கட்சியில் இணைந்தவர்களை வரவேற்று துண்டு அணிவித்து வாழ்த்தி பேசி னார்.  நிகழ்ச்சியில், மாவட்டச் செயலா ளர் பி.சீனிவாசன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள் ஜி.ஸ்டா லின், எஸ்.துரைராஜ், ஏ.வி.சிங்கார வேலன், ப.மாரியப்பன், ஒன்றியச் செயலாளர் டி.ஜி.ரவி, மாவட்டக் குழு உறுப்பினர்கள் சி.மேகநாதன், அமுல்காஸ்ட்ரோ, ஏ.அறிவழகன், மயிலாடுதுறை நகரச் செயலாளர் துரைக்கண்ணு, குமரேசன் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.