districts

img

கலைஞர் நூற்றாண்டு விழா பேச்சுப் போட்டிகள்

அரியலூர், செப். 27- அரியலூர் மாவட்டம் உடையார்பாளை யத்தை அடுத்துள்ள தத்தனூர் மீனாட்சி இராமசாமி பொறியியல் கல்லூரியில், மாவட்ட அளவிலான பொறியியல், பாலிடெக் னிக் கல்லூரி மாணவர்களுக்கான மாபெ ரும் பேச்சுப்போட்டி நடைபெற்றது.  போட்டிக்கு தமிழ்நாடு அரசு போக்கு வரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தலைமை வகித்து சிறப்புரையாற்றினார். மீனாட்சி இராமசாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம்.ஆர்.ரகுநாதன் முன்னிலை வகித்தார். ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் கா.சொ.க.கண்ணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சட்டமன்றத் தொகுதி வாரியாக, வெற்றி  பெற்ற மாணவர்களுக்கு மீனாட்சி இராம சாமி கல்வி நிறுவனங்களின் தாளாளர் எம். ஆர்.ரகுநாதன் பரிசு வழங்கினார்.