பாபநாசம், நவ.25 - தமிழக முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழா, சட்டமன்ற நாயகர் கருணாநிதி கருத்தரங்கம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. சட்டமன்ற பேரவை கூடுதல் செயலர் ரவிச்சந்திரன் உரையாற்றி னார். பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் ‘கருணாநிதியின் நீதி’, ‘கருணாநிதி யின் பார்வையில் பெண்’ என்ற தலைப்பிலும், திருக்கருக்காவூர் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவி கள் மிதர்ஷினி ‘கருணாநிதியின் பன்முக ஆளுமை’ என்ற தலைப்பி லும், ஆர்த்தியா ‘கருணாநிதியின் சமுதாயச் சிந்தனைகள்’ என்ற தலைப்பிலும், திருப்பந்துருத்தி அரசு மேல்நிலைப் பள்ளி மாண வர் ஆண்ட்ரு ஜோ ‘கருணாநிதி யின் பன்முகத் திறமை’ என்ற தலைப்பிலும் பேசினர். பாபநாசம் எம்.எல்.ஏ ஜவா ஹிருல்லா, அரசு கொறடா செழி யன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். பாபநாசம் பேரூராட்சி தலைவி பூங்குழலி, திமுக மாவட்ட துணைச் செயலர்கள் அய்யாராசு, துரைமுருகன், ஒன்றியச் செயலர் வடக்கு தாமரைச்செல்வன், பாப நாசம் பேரூர் செயலர் கபிலன், சிறுபான்மையினர் அணி நிர்வாகி அனிபா, சுற்றுச்சூழல் அணி நிர்வாகி செல்வ முத்துகுமரன், மருத்துவ அணி துணைத் தலைவர் நவநீத கிருஷ்ணன், கலை, இலக்கிய பகுத்தறிவு அணி நிர் வாகி முபாரக் ஹீசைன், உடற் கல்வி ஆசிரியர் செல்வகுமார், என்.சி.சி அலுவலர் சரவணன் உட்பட ஆசிரியர்கள், மாணவர்கள் பங்கேற் றனர். வெற்றி பெற்ற மாணவர் களுக்கு சான்றிதழ், புத்தகம் வழங் கப்பட்டது. சட்டமன்ற பேரவை இணைச் செயலர் பாண்டியன் நன்றி கூறினார்.