districts

img

கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் ராஜகிரியில் நடைபெற்றது

திமுக-வின் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் தெற்கு ஒன்றியம் சார்பில் கலைஞர் நூற்றாண்டு தொடக்க விழா பொதுக் கூட்டம் ராஜகிரியில் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய கழகச் செயலர் நாசர் தலைமை வகித்தார். ஊராட்சி மன்ற உறுப்பினர் முபாரக் ஹூசைன் வரவேற்றார். தலைமைக் கழகப் பேச்சாளர் சைதை சாதிக், மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் இராமலிங்கம் ஆகியோர் பேசினர். பெருமாள்கோயில் ஊராட்சி மன்றத் தலைவர் ராஜேந்திரன்,  மணலூர் முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயந்தி உட்பட பலர் பங்கேற்றனர். கிளை கழகச் செயலர் ரஹமத்துல்லா நன்றி கூறினார்.