மயிலாடுதுறை, ஜூன் 10-
மறைந்த தமிழ்நாடு முன் னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி பிறந்த நாள் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் தமிழ்நாடு முழுவதும் மரக் கன்றுகள் நடும் பணியை சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதன் தொடர்ச்சியாக நெடுஞ்சாலைத் துறை சார்பில் மயிலாடுதுறை மாவட்டம் முழுவதும் 6 ஆயி ரம் மரக்கன்றுகள் நடும் பணி தொடக்க விழா பொறை யாரில் நடைபெற்றது.
விழாவிற்கு மயிலாடு துறை நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் பால சுப்பிரமணியன் தலைமை வகித்தார். தரங்கம்பாடி பேரூராட்சி மன்ற தலைவர் சுகுணசங்கரி குமாரவேல், உதவி கோட்ட பொறியாளர் இந்திரன், திமுக ஒன்றியச் செயலாளர் அப்துல் மாலிக், பேரூராட்சித் துணைத் தலை வர் பொன்.ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தரங்கம்பாடி, ஆடுதுறை நெடுஞ்சாலை அருகில் நிவேதா முருகன் எம்எல்ஏ மரக்கன்றுகளை நட்டார்.