நீடாமங்கலம், ஜூன் 18-
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் நீடாமங்கலம் கிளை சார்பாக கலை இலக்கிய இரவு விழா சனிக் கிழமை இரவு நடைபெற்றது.
கிளைத் தலைவர் எஸ்.எஸ்.ராமன் தலைமை வகித்தார். ஊராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் சோம.செந்தமிழ் செல்வன், பேரூ ராட்சி மன்றத் தலைவர் ஆர்.ராம்ராஜ், நீலன் பள்ளி தாளாளர் நீலன் .அசோகன், பேரூராட்சித் துணைத் தலைவர் ஆனந்த மேரி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநிலச் செயற்குழு உறுப்பினர் எழுத்தா ளர் ஸ்டாலின் சரவணன் துவக்க உரை யாற்றினார். “பெரியோர் எல்லாம் பெரியார் அல்ல” என்ற தலைப்பில் மாநில துணைத் தலைவர் கவிஞர் நந்தலாலா, “எங்கே போகி றோம்” என்ற தலைப்பில் மாநிலத் துணைப் பொதுச்செயலாளர் களப்பிரன், “எண்ணித் துணிக எழுத்து” என்ற தலைப்பில் ரேணுகா மணாளன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
மாவட்டத் தலைவர் சௌந்தர்ராஜன், மாவட்டச் செயலாளர் வெங்கடேசன், தஞ்சா வூர் மாவட்டச் செயலாளர் விஜயகுமார், மாவட்டப் பொருளாளர் செல்வராஜ், வழக்க றிஞர் அரசு தாயுமானவன், மாவட்ட துணைத் தலைவர் அம்பிகாபதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
காவிரி கலைக்குழுவின் நாட்டுப்புற பாடல் கள், ஆதித்தமிழர் சரவணன் குழுவினரின் கிராமிய தப்பாட்ட கலை நிகழ்ச்சி மற்றும் ஒயிலாட்டம், கோலாட்டம், கரகாட்டம், சிலம் பாட்டம் ,பரதநாட்டியம், காவடியாட்டம் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
எழுத்தாளர் ஐ.வி. நாகராஜன் எழுதிய இரு வேறு இந்தியா என்ற புத்தக வெளியிடப் பட்டது. கவிஞர் வல்லம் தாஜ்பால் தலை மையில் கவிச்சரம் நடைபெற்றது. பல்நோக்கு சேவை இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு நடித்த சத்ரபதி சிவாஜி நாடகம் நடந்தது.
மாவட்டத் துணைத் தலைவர் அம்பிகா பதி, மாவட்டக்குழு உறுப்பினர் பொன்முடி, கிளை துணைச் செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி னர். நடந்து முடிந்த பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பு அரசு பொதுத்தேர் வில் சிறப்பிடம் பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கப்பட்டது.
முன்னதாக கிளைச் செயலாளர் சண்முகம் வரவேற்றுப்பேசினார். நிறைவில் கிளை துணைத் தலைவர் ராஜா நன்றி கூறினார்.