வாக்குப்பதிவு இயந்திரங்கள் வருகை
பாபநாசம், மார்ச் 24 - மக்களவைத் தேர்த லையொட்டி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலு வலகத்தில் இருந்து, பாப நாசம் எம்.எல்.ஏ தொகு திக்குரிய மின்னணு வாக்குப் பதிவு இயந்தி ரங்கள், விவிபேட் உள்ளிட்டவை எடுத்து வரப்பட்டு, பாபநாசம் பிடிஓ அலுவலகத்தில் வைக்கப்பட்டன. பாபநா சம் சட்டமன்றத் தொகுதி உதவித் தேர்தல் நடத் தும் அலுவலர் முத்து கிருஷ்ணன், பாபநாசம் தாசில்தார் மணிகண்டன், தேர்தல் துணை தாசில் தார் விவேகானந்தன் உள்ளிட்டோர் உடனி ருந்தனர்.
பறக்கும் படையினரின் பணிகள் ஆய்வு
புதுக்கோட்டை, மார்ச் 24 - பறக்கும்படை குழு வினர்கள் மற்றும் நிலை யான கண்காணிப்பு குழு வினர்களின் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், புதுக்கோட்டை மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஐ.சா.மெர்சி ரம்யா தலைமையில் சனிக் கிழமை நடைபெற்றது. நாடாளுமன்ற பொதுத் தேர்தல்-2024 தொ டர்பாக, புதுக்கோட்டை மாவட்டத்தில் 18 பறக்கும் படை குழுவில் 90 நபர்களும், 18 நிலை யான கண்காணிப்பு குழுவில் 90 நபர்களும், வீடியோ கண்காணிப்பு குழுவில் 12 நபர்களும் என மொத்தம் 192 அலுவலர்கள் தேர்தல் நடத்தை விதிமுறை களை மீறி பணப்பட்டு வாடா செய்யப்படுவதை தவிர்த்திடும் வகையில் பணிகளை மேற் கொண்டு வருகின்றனர்.
குமரப்பா பள்ளியில் ஆண்டு விழா
தஞ்சாவூர், மார்ச் 24 - தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி டாக்டர் ஜே. ஸி.குமரப்பா செண்டினரி வித்யா மந்திர் மெட்ரிக், மேல்நிலைப் பள்ளியில் சனிக்கிழமை ஆண்டு விழா நடைபெற்றது. தமிழ்நாடு தனியார் பள்ளிகள் தாளாளர்கள் சங்க நிறுவனத் தலைவர் முனைவர் ஜி.ஆர்.ஸ்ரீதர் தலைமை வகித்தார். பரிமளா அசோக்குமார், மோகனா சேகர், பேரூ ராட்சி தலைவர் சாந்தி சேகர் ஆகியோர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாண வர்களுக்கு பரிசு வழங்கிப் பேசினர். மேலும் மாணவ, மாணவி களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதில் பள்ளி நிர்வாக இயக்குநர் நாகூர் பிச்சை, பள்ளி முதல்வர் சர்மிளா, நிர்வாக அலு வலர் சுரேஷ், ஆசிரி யர்கள், பெற்றோர்கள், மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.
விஜயபாஸ்கர் சொத்துக் குவிப்பு வழக்கு ஆவணங்களின் நகல் கேட்டு நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை மனு
புதுக்கோட்டை, மார்ச் 24 - முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் குற்றப் பத்திரிகை மற்றும் ஆவணங்களின் நகல்களைக் கேட்டு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினர் மனு அளித்துள்ளனர். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அதிமுக சட்டப்பேரவை உறுப்பினராக இருப்ப வர் சி. விஜயபாஸ்கர். இவர் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சராக இருந்தபோது, வருமா னத்துக்கு அதிகமாக ரூ.35.79 கோடி சொத்து சேர்த்ததாக ஊழல் தடுப்பு மற்றும் கண்கா ணிப்புப் பிரிவு போலீசார் வழக்கு தொடர்ந் துள்ளனர். இந்த வழக்கு புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே அவரது சென்னை மற்றும் இலுப்பூர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் வியாழக்கிழமை அதிரடி சோதனை நடத்தினர். சுமார் 11 மணி நேரத்துக் கும் மேலாக இந்த சோதனை நீடித்தது. இதன் தொடர்ச்சியாக, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கின் குற்றப் பத்திரிகை நகல் மற்றும் ஆவணங்களின் நகல்களை வழங்க வேண்டும் என அம லாக்கத் துறையின் வழக்குரைஞர்கள் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவின் மீது, ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புப் பிரிவு போலீசாரும், முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரும் பதி லளிக்க நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
சிதம்பரம் தொகுதி வேட்பாளர் திருமாவளவனை வெற்றி பெறச் செய்வோம்! சிஐடியு தீர்மானம்
அரியலூர், மார்ச் 24 - சிஐடியு அரியலூர் மாவட்ட அலுவலகத்தில், சிஐடியு மாவட்டக் குழு கூட்டம் தலைவர் கே.கிருஷ்ணன் தலை மையில் நடைபெற்றது. மாநிலச் செயலாளர் எஸ்.ரங்கராஜன், செயலாளர் பி.துரைசாமி ஆகியோர் பேசினர். மார்ச் 31 அன்று சிஐடியு சார்பில் அரியலூரில் சிறப்பு பேரவை நடத்துவது, அனைத்து இணைக்கப்பட்ட சங்கங்களில் இருந்து 300-க்கும் மேற்பட் டோரை திரட்டுவது, சிதம்பரம் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வேட்பாளர் தொல். திருமாவளவனை வெற்றி பெறச் செய்வது. கட்சியின் திண்டுக்கல், மதுரை நாடாளுமன்றத் தொகுதி வேட்பாளர்கள் தேர்தலில் வெற்றி பெற, சங்க வாரியாக நிதி திரட்டி கோட்டா வசூல் செய்து மார்ச் 31 அன்று பேரவையில் வழங்குவது, யூடியூப் சேனல் துவங்க அனைத்து சங்க மும் நிதி அளிப்பது என முடிவு செய்யப்பட்டது.
பெரம்பலூர் வேட்பாளர் கே.என்.அருண் நேரு வெற்றிக்கு பாடுபட அறிவுறுத்தல்
பெரம்பலூர், மார்ச் 24- பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கே.என்.அருண்நேரு வெற்றி குறித்து, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் ஆலோசனை கூட்டம் சனிக்கிழமை பெரம்பலூர் பாலக்கரையில் உள்ள மாவட்ட திமுக அலுவ லகத்தில் நடைபெற்றது. இதற்கு கழக துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா தலைமை வகித்தார். பெரம்பலூர் தொகுதி யில் திமுக வேட்பாளர் கே.என். அருண்நேரு, பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற பாடுபட வேண்டும். பெரம்பலூர் மாவட் டத்தில் உள்ள கழக நிர்வாகிகள் அனைவரும் முழு அர்ப்பணிப்போடு செயல்பட வேண்டும் என ஆ.ராசா அறிவுறுத்தினார். இதில் மாவட்ட பொறுப் பாளர் வீ.ஜெகதீசன், சட்டமன்ற உறுப்பினர் எம். பிரபாகரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.