அரியலூர், டிச.31- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய பெருந்தலைவர் ரவிசங்கர் தலைமை யில் வியாழனன்று நடைபெற்றது. கூட்டத்தில் ஜெயங் கொண்டம் ஒன்றியத்தில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் நிதி நிலவரம் குறித்து ஆலோசனை செய் யப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒன்றிய பெருந்தலைவர் ரவிசங்கர், தமிழகத்தில் விருதுநகர், அரியலூர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக் கல்லூரி கட்டுமானப் பணி முடிவடைந்து மருத்துவ கல்லூ ரிகளை பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைக்க உள்ளார். இதனையடுத்து கங்கைகொண்ட சோழபுரத்தை தலைநகராகக் கொண்டு ஆட்சி செய்த ராஜேந்திர சோழ னின் பெருமைகளை நினைவு கூறும் வகையில், அரியலூர் மாவட்ட மருத்துவ கல்லூரிக்கு ராஜேந்திர சோழன் பெயரை சூட்ட வேண்டுமென ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. மேலும் ஜெயங்கொண்டம் ஒன்றியத்தில் அரசுக்கு சொந்தமான புறம்போக்கு நிலங்களை கண்டறிந்து ஒன்றியத்தில் உள்ள அனைத்து ஏரிகள், குளங்கள் மற்றும் வரத்து வாய்க்கால்களை சீரமைத்து ஏரிகளில் தண்ணீர் தேங்குவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்ள உத்தரவிட்ட தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டா லின் மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கு செயற்குழு கூட்டத்தில் நன்றி செலுத்துவதாக தீர்மானம் நிறை வேற்றப்பட்டது.