அரியலூர், மார்ச் 29- சிதம்பரம் மக்கள வைத் தொகுதிக்குட்பட்ட அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியத்துக் குட்பட்ட வாக்குப் பதிவு மையங்களில் மாவட்ட தேர்தல் அலுவலரும், அரியலூர் ஆட்சியரு மான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா வெள்ளிக் கிழமை ஆய்வு செய்தார். மக்களவைத் பொதுத் தேர்தல் வாக்குப் பதிவு நடைபெறவுள்ள வாரணவாசி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, சமத்துவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளி - வாரணவாசி மற்றும் கீழப்பழூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி, கீழப்பழுவூர் அழகப்பா சிமெண்ட் அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளிட்ட மையங்களில் ஆட்சியர் ஆய்வு செய்தார். மேலும், மின் விளக்கு வசதிகள் இல்லாத இடங்களில் உடனடியாக மின்விளக்குகள், கழிவறை வசதிகள், குடிநீர் வசதிகள் ஆகிய அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தக் கூடிய சாய்வு தளங்களை உடனடியாக ஏற்படுத்த சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறி வுறுத்தினார். ஆய்வின்போது வருவாய் கோட்டாட் சியர் ராமகிருஷ்ணன், வட்டாட்சியர் ஆனந்த வேல் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.