districts

img

மாரத்தானில் முதலிடம்: மாணவிக்கு பாராட்டு

தஞ்சாவூர், ஆக.30-  சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, தஞ்சாவூர் கல்லூரி மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டப் போட்டி மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலகம் மூலம் புதன்கிழமை நடைபெற்றது. அன்னை சத்யா விளையாட்டு அரங்கத்திலிருந்து, தஞ்சா வூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்-ஆல் துவக்கி வைக்கப் பட்ட இந்த மாரத்தான் ஓட்டம், தென்னக பண்பாட்டு மையத் தில் நிறைவு பெற்றது. இப்போட்டியில், தமிழ் பல்கலைக்கழக இலக்கியத்துறை மாணவி பிரியதர்ஷினி முதலிடம் பிடித்து  சாதனை படைத்தார். வெற்றி பெற்ற மாணவியை துணை வேந்தர் வி.திருவள்ளுவன் பாராட்டினார்.