districts

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பாபநாசம், மே 10-

     பாபநாசம் பட்டுக்கோட்டை அழகிரி மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களுக்கான பாராட்டு, பரிசளிப்பு விழா பள்ளி அறங்காவலர் திருநாவுக்கரசு தலை மையில் நடைபெற்றது.

     நிகழ்ச்சியில் பள்ளி செயலர் செல்வராஜ் வரவேற்றார்.  அறக்கட்டளை தலைமைச் செயலர் கலிய மூர்த்தி, நிதிச்  செயலர் பொம்மி முன்னிலை வகித்தனர். அறங்காவ லர்கள் திருஞானசம்பந்தம். ஜெயராமன், வரதராஜன், இளவரசி, நடராஜன், அறிவு களஞ்சியம் வாழ்த்தினர்.  ஆசிரியர்கள், பணியாளர்களுக்கு பரிசுகள் வழங்  கப்பட்டன. பள்ளி தலைமை ஆசிரியர் தீபக், ஆசிரியை கள் சித்ரா, கவிதா ஏற்புரையாற்றினர்.

    அறக் கட்டளை நிர்வாகச் செயலர் கைலாசம் நன்றி கூறினார்.