அறந்தாங்கி, செப்.6 - ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 2024 ஆம் ஆண்டு நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 7.5 சதவீத அரசு உள்ஒதுக் கீட்டில் மாணவி கே.திவ்யதர்ஷினி, சிவகங்கை மருத்துவக் கல்லூரிக் கும், மாணவர் எஸ்.சிவராஜா தர்மபுரி மருத்துவக் கல்லூரிக்கும், மாணவர் கே.ஹரிநந்தா சிவகங்கை மருத்து வக் கல்லூரிக்கும் மருத்துவம் பயில தேர்வு பெற்றுள்ளனர். மேலும், மாணவர் பி.கதிர் திருச்சி சட்டக் கல்லூரியில் சட்டம் பயிலவும், மாணவி என்.ஸ்ரீநிதி நான் முதல்வன் திட்டத்தின் மூலம் மத்திய பல்கலைக்கழகங்களுக்கான பொது நுழைவுத்தேர்வை எழுதியும் வெற்றி பெற்று, திருவாரூர் மத்தியப் பல்கலைக்கழகத்தில் 5 ஆண்டு எம்.ஏ.பொருளாதாரம் பயிலவும் தேர்வு பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். சாதனை புரிந்த இந்த மாணவர்களுக்கான பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு அறந்தாங்கி மாவட்டக் கல்வி அலுவலர் கே.ஜெயந்தி தலைமை வகித்தார். அறந்தாங்கி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.டி. இராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, ஆசிரியர் தின வாழ்த்தும், சாதனை மாணவர்களை பாராட்டி பொன்னாடை அணி வித்தும் நினைவுப் பரிசு மற்றும் கல்வி உதவித் தொகை வழங்கி சிறப்பித்தார். ஆவுடையார்கோவில் ஊராட்சி ஒன்றியம் சார்பில் ஒன்றியக் குழுத்தலைவி கே.உமா தேவி மற்றும் செந்தில்குமரன் ஆகியோர் மாண வர்களை பாராட்டி கல்வி உதவித்தொகை வழங்கினர். பள்ளியின் முதல் மருத்துவரும், உடுமலைப்பேட்டை தலைமை மருத்துவரு மான டாக்டர் எஸ்.ரவீந்தரன் குடும்பத்தின் சார்பி லும், பள்ளியின் முன்னாள் மாணவரும் தொழி லதிபருமான தென்றல் நீலகண்டன் சார்பிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. ஆவுடையார்கோவில் தொழி லதிபர் கண்ணப்பன் மற்றும் கல்வியாளர் சுகுமார், காசிநாதன் உள்ளிட்ட முன்னாள் மாண வர்கள், கல்வி உதவித்தொகை வழங்கினர். முன்னதாக பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன் வரவேற்றார். இயற்பியல் ஆசிரியர் இராஜேந்திரன் நன்றி கூறினார்.