தஞ்சாவூர், அக்.29 - முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம், ஏனாதி ராஜப்பா கல்லூரி, தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியோர் இணைந்து ஏனாதி ராஜப்பா கல்லூரி யில், தனியார்துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின. மாவட்ட ஆட்சி யர் தீபக் ஜேக்கப் தலைமை வகித்தார். பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் 20 வேலை நாடுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எஸ். பழநி மாணிக்கம் வழங்கினார். முகாமில், வேலையளிக்கும் நிறுவனத்தினர் 77 பேரும், வேலை நாடுநர்கள் 1,955 பேரும் கலந்து கொண்டனர். இவர்களில் 344 பேர் பணி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்டனர். 276 பேர் மறு தீர்வுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.