districts

திருச்சி முக்கிய செய்திகள்

சிறப்பு செலவினப்  பார்வையாளர் நியமனம்

அரியலூர், ஏப்.3 - மக்களவைத் தேர்த லையொட்டி, சிதம்பரம்  தொகுதிக்கு சிறப்பு  செலவினப் பார்வை யாளராக பி.ஆர்.பால கிருஷ்ணன் நியமிக்கப் பட்டுள்ளார். தேர்தல் குறித்த புகார் மற்றும்  தகவல்களை அவரது  கைப்பேசி 9345298218  எண்ணில் தெரிவிக்க லாம் என்று மாவட்ட ஆட்சியரகம் தெரிவித் துள்ளது.

இப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சி

தஞ்சாவூர், ஏப்.3-  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி ஜமாலியா பள்ளிவாசலில் இஃப்தார்  எனும் நோன்பு திறப்பு  நிகழ்ச்சியில் இந்து மதத்தை சேர்ந்த பிர முகர்கள், நோன்பாளி களுக்கு உணவுப்பொருட் கள் வழங்கியதும், அதனை இஸ்லாமி யர்கள் அன்போடு ஏற்றுக்  கொண்ட சம்பவம் மகிழ்ச்சியை ஏற்படுத்தி யுள்ளது. பேராவூரணி ஜமா லியா பள்ளிவாசலில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இஃப்தார்  நோன்பு திறப்பு நிகழ்ச்சி யில், நோன்பு திறந்த நூற்றுக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்களுக்கு 18 நிமிடங்களில் 558 தோப்புக்கரணம் போட்டு  உலக சாதனை நிகழ்த்திய மணிகண்டன், அண்ணா நகரை சேர்ந்த பசும்பொன் முத்து ராமலிங்க தேவர் பேரவை அமைப்பை சேர்ந்த மாரி ஆகியோர் தேவையான உணவுப் பொருட்களை வழங்கி னர்.  இஸ்லாமியர்கள் அதை அன்போடு ஏற்றுக் கொண்டு நோன்பு திறந்த  சம்பவம் மத நல்லி ணக்கம் நாடுபவர்களி டையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மோட்டார் சைக்கிள்- மினி லாரி மோதல் 2 பேர் காயம்

அரியலூர், ஏப்.3- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் கண பதி நகரைச் சேர்ந்த கொளஞ்சி (50) என்பவர் பெரியவளையம் சென்று விட்டு, அங்கிருந்து பைபாஸ் ரோட்டில் ஏறி  வீட்டிற்கு திரும்ப வந்து  கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த மினிலாரி ஒன்று  கொளஞ்சி மோட்டார் சைக்கிள் மீது மோதியது.  இதில் கொளஞ்சி மற்றும் மினி லாரியில் வந்த நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் ராம்நகர் கோரி யாம்பட்டியைச் சேர்ந்த  செல்வம் (47) ஆகிய இரு வரும் காயமடைந்தனர்.  காயமடைந்த இரு வரையும் அவ்வழியாக வந்தவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சிகிச் சைக்காக சேர்த்தனர். இதுகுறித்த அறிந்த ஜெயங்கொண்ட போலீ சார் மினி லாரியை ஒட்டி  வந்து விபத்தை ஏற்படுத் திய, நாமக்கல் மாவட்டம் பட்டணமுனியப்ப பாளையத்தைச் சேர்ந்த  கருணாகரன் (52) மீது  வழக்குப் பதிந்து விசா ரித்து வருகின்றனர்.

சிறுநீர் கழிக்கச் சென்ற அரசுப் பள்ளி  மாணவர் மின்சாரம் தாக்கி படுகாயம்

மயிலாடுதுறை, ஏப்.3 - மயிலாடுதுறை மாவட்டம், செம்ப னார்கோவில் அருகேயுள்ள கூடலூர் கிரா மத்தில் அரசு தொடக்கப் பள்ளி செயல்படு கிறது. கூடலூர் ராஜூவ்நகரில் வசிப்பவர் அமுல்ராஜ். இவரின் 8 வயது மகனான ரிச்சர்ட் சாம்சன் இந்த அரசு தொடக்கப் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படித்து வரு கிறார். புதனன்று பள்ளியின் காலை இடை வேளையின் போது பள்ளி மைதானத்தை யொட்டி சிறுநீர் கழிக்கச் சென்றுள்ளார். அங்கு ஏற்கனவே மின் கம்பத்திலிருந்து அறுந்து கிடந்த மின் கம்பி, கீழே  கம்பி  வேலியில் கிடந்திருக்கிறது. இதை அறியாத  மாணவர் ரிச்சர்ட் சாம்சன் கம்பி வேலியை  தொட்டவுடன் மின்சாரம் தாக்கி படுகாய மடைந்து மயங்கி விழுந்துள்ளார். தகவலறிந்து வந்த பெற்றோர், உறவி னர்கள் மாணவரை மீட்டு மயிலாடுதுறை அரசு  மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனு மதித்த நிலையில், மேல் சிகிச்சைக்காக திரு வாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்க்கப்பட்டு ஆபத்தான நிலையில் சிகிச்சை  பெற்று வருகிறார். அரசுப் பள்ளிகளில் கழிப்பறை வசதிகள்  போதுமான அளவிற்கு இல்லாததால்தான், இச்சம்பவம் நடந்துள்ளதாக இந்திய மாண வர் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது. மாவட்ட ஆட்சியர் உடனடியாக இப்பள்ளி யில் ஆய்வு நடத்த வேண்டுமென இந்திய மாணவர் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

தொடக்க, நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கூட்டம்

அறந்தாங்கி, ஏப்.3-  புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஒன்றியத்தில் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதனை மண மேல்குடி வட்டார கல்வி அலுவலர் இந்திராணி  தொடங்கி  வைத்தார். மணமேல்குடி வட்டார வள மைய மேற்பார்வையா ளர் (பொ) சிவயோகம் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில், அருகிலுள்ள அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளியில் இருந்து  அனைத்து பள்ளிகளுக்கும் மடிக்கணினி கிடைக்க வேண்டும். பள்ளியில் மாணவர் சேர்க்கை பணியை தொய்வின்றி மேற்கொள்ள வேண்டும். அங்கன் வாடி மையத்தின் மூலம் ஐந்து வயது பூர்த்தி செய்த அனைத்து குழந்தைகளையும் பள்ளியில் சேர்த்திருப்பதை உறுதி செய்ய வேண்டும். ஸ்மார்ட் கிளாஸ் மற்றும் ஹைடெக் லேப் வகுப்பறைகளை தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பிஎஸ்என்எல் இணைய வசதியை அனைத்துப் பள்ளிகளும் பெற்றிருக்க வேண்டும். அலுவலகத்தில் இருந்து கேட்கப்படும் புள்ளி  விவரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும். தினமும்  மேற்கொள்ளப்படும் மாணவர் சேர்க்கையை எமிஸ் இணைய தளத்தில் பதிவு செய்ய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வில் ஆசிரியர் பயிற்றுநர்கள் முத்துராமன், வேல்சாமி, அங்கையற்கண்ணி மற்றும் அனைத்து தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

சோதனையின் தரம்  உயர்த்தப்பட வேண்டும் கண்காணிப்பு குழுவினருக்கு அறிவுறுத்தல்

அரியலூர், ஏப்.3 - மக்களவைத் தேர்தலையொட்டி அரியலூர் மாவட்டத்தில் வாகனச் சோதனையின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும் என்று  நிலையான கண்காணிப்பு குழுவினருக்கு தேர்தல் நடத்தும் அலு வலர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா அறிவுறுத்தினார். அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுவினருட னான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தலைமை வகித்து கூறுகையில், “மக்கள வைத் தேர்தல் நன்னடத்தை விதி அமலில் உள்ளதால் சந்தேகத் துக்கிடமான அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். பிரதான சாலை மட்டுமல்லாது, அனைத்து கிராம சாலை களும் சோதனை செய்யப்பட வேண்டும். அனைத்து வகையிலும்  பெறப்படும் புகார்கள் குறித்த உண்மைத் தன்மையினை கண்ட றிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சோதனையின் தரம் மேலும் உயர்த்தப்பட வேண்டும். சந்தேகத்துக்கிடமான இடங்களிலும், புகார்கள் அதிகம் வரப்பெ றும் இடங்களிலும் சோதனைச் சாவடி அமைத்து அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும். தனியார் இடத்தில்  உள்ள சுவர் விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட உரிமையாளரிடம் அனுமதி பெற்ற பின்பு வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய  வேண்டும் என அறிவுறுத்தினார்.

அதிமுக ஆட்சியில் நடந்த போராட்டத்தில் பங்கேற்ற திமுக எம்.பி., எம்எல்ஏ-க்கள் நீதிமன்றத்தில் ஆஜர்

தஞ்சாவூர், ஏப்.3 -  அதிமுக ஆட்சியில் நடந்த போராட் டங்களில் பங்கேற்ற 2 திமுக எம்.பி.,க்கள், 2 திமுக எம்எல்ஏ.க்கள் உள்ளிட்ட 25 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத் தில் செவ்வாய்க்கிழமை ஆஜராகி னர். தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத் தில் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரை அப்போது ஆட்சியிலிருந்த அதிமுக அரசின் செயல்பாடுகளை கண்டித்து சாலை மறியல் போராட்டம், ஆர்ப்பாட்டம், மனித சங்கிலி போராட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களில் திமுக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடு தலை சிறுத்தைகள் கட்சியினர் ஈடுபட்ட னர். இதையடுத்து கும்பகோணம் கிழக்கு, மேற்கு தாலுகா காவல் நிலை யங்களில் 8 வழக்குகள் பதிவு செய்யப் பட்டு, இந்த வழக்குகள் அனைத்தும் நீதிமன்றத்துக்கு விசாரணைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. தொடர்ந்து தஞ்சாவூர் மாவட்ட மூன்றாம் எண் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் செவ்வா யன்று வழக்குகள் விசாரணைக்கு வந்தன. அப்போது மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் செ.ராமலிங்கம், மாநிலங்களவை உறுப்பினர் சு.கல்யா ணசுந்தரம், தமிழக அரசின் தலைமை கொறடாவும், திருவிடைமருதூர் எம்எல்ஏவுமான கோவி.செழியன்,  கும்பகோணம் எம்எல்ஏ சாக்கோட்டை  க.அன்பழகன் மற்றும் திமுக நிர்வா கிகள், காங்கிரஸ் மாவட்டத் தலை வர் லோகநாதன், மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர்  சின்னை.பாண்டியன், விடுதலை சிறுத் தைகள் கட்சியின் இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை மாநிலச் செயலா ளர் குடந்தை தமிழினி உள்ளிட்ட 25 பேர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, 8 வழக்குகளையும் ஏப்.10 ஆம்  தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

இளைஞர் மர்ம மரணம் கொலை வழக்காக மாற்றக் கோரி உறவினர்கள் போராட்டம்

அறந்தாங்கி, ஏப்.3- புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அத்தாணி பகுதியைச் சேர்ந்தவர் கணேசன். இவரது மகன்  விக்னேஷ் (27) திருப்பூரில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சொந்த ஊருக்கு  வந்துள்ளார்.  தொடர்ந்து கடந்த மார்ச் 26 அன்று இரவு நண்பர்களை பார்க்க வெளியில் சென்றவர் வெகு நேரமாகியும் வீட்டிற்கு  வரவில்லை. இதனால் பதற்றமடைந்த உறவினர்கள் மறுநாள்  காலை தேடி பார்த்தனர். அப்போது திருவாப்பாடி ஏரியில்  விக்னேஷ் சடலமாக கிடந்துள்ளார்.  அதனைத் தொடர்ந்து விக்னேஷ் இறப்பிற்கு காரணம் அதே பகுதியைச் சேர்ந்த அதிமுக ஒன்றியச் செயலாளர் பெரியசாமியின் மகன் தமிழ் மற்றும் அவரது நண்பர் யோகேஸ் வரன் ஆகியோர்தான் எனக் கூறி கட்டுமாவடி - அறந்தாங்கி  சாலையில் உறவினர்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட னர். அறந்தாங்கி கோட்டாட்சியர் அவர்களோடு பேச்சு வார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதி யளித்தார். ஆனால் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி 4  நாட்கள் கடந்த நிலையில், உரிய நடவடிக்கை எடுக்கப்பட வில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் இந்த வழக்கை  கொலை வழக்காக பதிவு செய்து, சிபிசிஐடி விசாரணைக்கு  வழக்கை மாற்ற வலியுறுத்தி உயிரிழந்த இளைஞரின் உறவி னர்கள் மற்றும் அனைத்து ஜனநாயக அமைப்புகள், அறந் தாங்கி கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்பு கோட்டாட்சியரிடம் மனு  அளித்தனர். மனு மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று  கோட்டாட்சியர் கூறினார்.