கபீர் புரஸ்கார் விருது பெற விண்ணபிக்கலாம்
திருச்சிராப்பள்ளி, டிச.11 - 2025 ஆம் ஆண்டிற்கான “கபீர் புரஸ்கார் விருது” ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதலமைச்சரால் குடியரசு தின விழாவின்போது வழங்கப்படுகிறது. இவ்விருதானது தலா ரூ.20000, ரூ.10000 மற்றும் ரூ.5000க்கான காசோலை மற்றும் தகுதியுரை ஆகியவை தகுதியுடையோர்க்கு வழங்கப்படுகிறது.
திருச்சிராப்பள்ளி மாவட்டத்தைச் சார்ந்த விண்ணப்ப தாரர்கள் (ஆயுதப்படை வீரர்கள், காவல், தீயணைப்புத் துறை மற்றும் அரசு பணியாளர்களின் சமுதாய நல்லிணக்க செயல், அவர்கள் ஆற்றும் அரசுப் பணியின் ஒரு பகுதியாக நிகழும் பட்சத்தில் நீங்கலாக) இவ்விருதி னைப் பெறத் தகுதியுடையவர.
இவ்விருதானது ஒரு சாதி, இனம், வகுப்பைச் சார்ந்தவர்கள் பிற சாதி, இன வகுப்பைச் சார்ந்தவர் களையோ, அவர்களது உடைமைகளையோ வகுப்புக் கல வரத்தின் போதோ, தொடரும் வன்முறையிலோ காப்பாற் றியது வெளிப்படையாகத் தெரிகையில் அவரது உடல் மற்றும் மனவலிமையைப் பாராட்டும் வகையில் வழங்கப்படு கிறது.
மேற்காணும் விருதிற்கான விண்ணப்பங்களை https://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் 15.12.2024 அன்று அல்லது அதற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப் பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும். மேலும் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர், அண்ணா விளை யாட்டரங்கம், திருச்சிராப்பள்ளி (தொலைபேசி எண். 0431-2420685) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் தெரி வித்துள்ளார்.
அடையாள அட்டை கோரி போராட்டம்
பொன்னமராவதி, டிச.11 - புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேரூ ராட்சி பகுதியில், சாலையோர வியாபாரிகளுக்கு பயோ மெட்ரிக் அடையாள அட்டைக்கான கணக்கெடுப்பு பணி முடிந்து ஒன்றரை ஆண்டுகள் ஆகிவிட்டது.
ஆனால் இன்னும் அடையாள அட்டை வழங்கப்படவில்லை. உடனடியாக பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க வேண்டும். விடுபட்டவர்களையும் கணக்கெடுத்து அவர்களுக் கும் அடையாள அட்டை வழங்க வேண்டும் என கோரி பொன்னமராவதி பேரூராட்சி அலுவலகத்தில் புதுக்கோட்டை மாவட்ட சாலையோர விற்பனையா ளர்கள் சங்கத்தின் (சிஐடியு) ஒன்றியச் செயலாளர் தீன் தலைமையில் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்திய செயல் அலுவலர் அண்ணாதுரை, “தகுதியுள்ள அனை வருக்கும் உடனடியாக பயோமெட்ரிக் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதி அளித்தார். இதையடுத்து தற்காலிகமாக போராட்டத்தை கைவிட்டனர்.
முதியவருக்கு 5 ஆண்டு சிறை
தேனி, டிச.11- குன்னூரைச் சேர்ந்தவர் அழகுமலை மகன் வெள்ளைத்துரை (58). விவசாய கூலித் தொழிலாளி யான இவர், 6 வயது சிறுமிக்கு பாலியல் துன்புறுத்தல் அளித்ததாக கடந்த 2021, அக்.24 ஆம் தேதி ஆண்டி பட்டி மகளிர் காவல் நிலைய காவலர்கள் கைது செய்த னர்.
இந்த வழக்கு விசாரணை தேனி மாவட்ட போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் வெள்ளைத்துரையை குற்றவாளி என தீர்ப்பளித்து, 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.20 ஆயி ரம் அபராதம் விதித்து நீதிபதி பி.கணேசன் தீர்ப்பளித்தார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு விதிக்கப்பட்டுள்ள அப ராதத் தொகையுடன் சேர்த்து நிவாரணமாக அரசு ரூ.4 லட்சம் வழங்க வேண்டும். இதில், சிறுமியின் கல்வி மற்றும் மருத்துவச் செலவுக்கு அவரது தாயார் வசம் ரூ.50 ஆயிரத்தை உடனடியாகவும், மீதி தொகை ரூ.3.50 லட்சத்தை சிறுமியின் பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் வைப்புத் தொகையாகவும் வழங்க வேண்டும் என்று நீதிபதி உத்தரவிட்டார்.
கடையில் பணம் திருட்டு
விருதுநகர், டிச.10- விருதுநகர் கத்தாளம்பட்டி தெருவைச் சேர்ந்தவர் அன்புராஜ்(47). இவர் மெயின் பஜாரில் ஐஸ்கிரீம் கடை வைத்துள்ளார். இந்நிலை யில் வழக்கம் போல இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். திரும்ப வந்து பார்த்த போது, கடையின் பூட்டுகள் திறந்து கிடந்துள்ளன. இதனால் அதிர்ச்சியைடந்த அன்புராஜ் உள்ளே சென்று பார்த்த போது, ரூ.12ஆயிரம் திருடு போனது தெரியவந்துள்ளது. எனவே, இது குறித்து விருதுநகர் பஜார் காவல்நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
துப்புரவு தொழிலாளியை கொலை செய்ய முயற்சி
வாலிபருக்கு 5 ஆண்டு சிறை
தேனி, டிச.11- துப்புரவு தொழி லாளியை வெட்டிக் கொலை செய்ய முயன்ற வாலிப ருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அனுராதா தீர்ப்ப ளித்தார். காமயகவுண்டன்பட்டி, கருமாரியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த துப்புரவு தொழிலாளி சின்னன்(65).
இவர், அதே ஊரில் உள்ள பொது கழிப்பறையில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில், கடந்த 2016, பிப்.2 ஆம் தேதி காம யகவுண்டன்பட்டி, மந்தை யம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த தர்மர் மகன் முத் தையா(35) என்பவர், பொதுக் கழிப்பறையில் பெண் பகுதிக்குச் செல்ல முயன்றுள்ளார். இதை சின் னன் தடுத்ததால் ஆத்திரம டைந்த முத்தையா, அவரை அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் குறித்து முத்தையா மீது ராயப் பன்பட்டி காவல்நிலையத் தில் கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.
இந்த வழக்கு விசாரணை தேனி முதன்மை அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் முத்தை யாவை குற்றவாளி என தீர்மா னித்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை, ரூ.4,000 அபராதம் விதித்து நீதிபதி ஜி.அனுராதா தீர்ப்பளித்தார்.