தஞ்சாவூர், ஜூலை 28-
ஒன்றிய அரசின் இளம் சாதனையா ளர்களுக்கான பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகையை மாணவர்கள் பெற லாம் என்று தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “2023-24 நிதியாண்டில், நாடு முழுவதும் இதர பிற்படுத்தப்பட்டோர், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள், சீர்மரபின பழங்குடியினர் ஆகிய பிரிவு களைச் சேர்ந்த 30 ஆயிரம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கும் வகையில் பிரதம மந்திரியின் கல்வி உதவித்தொகை திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தைச் சார்ந்த 3,093 மாணவ, மாணவியர்களுக்கு இக்கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என ஒன்றிய அரசால் அறிவிக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின்கீழ் கல்வி உதவித்தொகை பெற விண்ணப் பிக்கும் விண்ணப்பதாரர்களின் (மாணவ, மாணவியர்கள்) பெற்றோர் அல்லது பாதுகா வலரின் ஆண்டு வருமானம் ரூ.2.50 லட்சத்துக் குள் இருத்தல் வேண்டும்.
https://vet.nta.ac.in என்ற இணைய தளத்தில் பட்டியலிடப்பட்டுள்ள பள்ளிகளில் 9 அல்லது 11 ஆம் வகுப்பு படித்துக் கொண்டி ருக்க வேண்டும். 9 மற்றும் 10 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.75 ஆயிரம் வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அதிகபட்சமாக ரூ.1.25 லட்சம் வரையிலும் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். தேசியத் தேர்வு முகமை நடத்தும் நுழைவுத் தேர்வில் பெற்ற தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப் படுவர்.
இத்தேர்விற்கு 10.8.2023-க்குள் https:// yet.nta.ac.in என்ற இணையதள முகவரி யில் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் 12.8.2023 முதல் 16.8.2023 தேதி வரை விண்ணப் பத்தில் திருத்தம் மேற்கொள்ள கால அவ காசம் வழங்கப்படும். எழுத்துத் தேர்வு 29.9. 2023 அன்-று நடைபெறும்.
விண்ணப்பத்துடன் கைப்பேசி எண், ஆதார் எண், ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு எண், வருமானச் சான்றிதழ் மற்றும் சாதிச்சான்றிதழ் ஆகிய ஆவணங்களை இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். இத்திட்டம் தொடர்பான முழுமையான விவ ரங்கள் https://yet.nta.ac.in மற்றும் http://socialjustice.gov.in/schemes/ ஆகிய இணையதளங்களில் வெளியிடப் பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார்.