districts

மஞ்சப்பை விருது பெற விண்ணப்பங்கள் வரவேற்பு

ஆட்சியர் தகவல் அரியலூர், ஜன.14 - மஞ்சப்பை விருதுக்கு தகுதியுள்ள வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரிய லூர் மாவட்ட ஆட்சியர் ஜா.ஆனிமேரி ஸ்வர்ணா தெரிவித்துள்ளார். ஒருமுறை பயன்படுத்தும் நெகிழிப் பொருள்களுக்கு மாற்றுப் பொருள் களை பயன்படுத்துவதை ஊக்குவிக்க வும், நெகிழிப் பைகளுக்கு மாற்றாக  மஞ்சப்பை (மஞ்சள் துணிப்பை) போன்ற பாரம்பரியமான, சுற்றுச்சூழ லுக்கு உகந்த மாற்றுப் பொருள்களை புத்துயிர் பெறச் செய்யவும், ஒருமுறை  பயன்படுத்தும் நெகிழி மீதான தடையை திறம்பட செயல்படுத்தி தங்களது வளாகத்தை நெகிழி இல்லாத வளாக மாக உருவாக்கும் சிறந்த பள்ளிகள்,  கல்லூரிகள் மற்றும் வணிக நிறுவனங் களுக்கு இவ்விருது வழங்கப்படு கிறது. வளாகத்தை நெகிழி இல்லாத வளாகமாக உருவாக்கும் 3 சிறந்த  பள்ளிகள், 3 சிறந்த கல்லூரிகள் மற்றும் 3 சிறந்த வணிக நிறுவனங்களுக்கு  இவ்விருது வழங்கப்படுகிறது. விருது பெறுவோர்களுக்கு முதல் பரிசாக ரூ. 10 லட்சம், 2 ஆம் பரிசாக ரூ.5 லட்சம், 3 ஆம் பரிசாக ரூ.3 லட்சமும் வழங்கப் படுகிறது. இதற்கான விண்ணப்பப் படிவங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலக  இணையதளமான https://ariyalur.nic.in/ இல் பெறலாம். விண்ணப்ப படி வத்தில் தனிநபர், நிறுவனத் தலை வரால் முறையாக கையொப்பமிடப் பட்டிருக்க வேண்டும். கையொப்பமிட்ட விண்ணப்பம் 2 பிரதிகள் மற்றும் மென் நகல் 2 பிரதிகளை மாவட்ட ஆட்சியரிடம் சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பங் களை சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி  1.5.2024 என தெரிவிக்கப்பட்டுள்ளது.