திண்டுக்கல், ஜுன் 28-
வேடசந்தூர் எம்.ஜி.ஆர். நகர் வீடுகளை இடிக்க வந்த சமூக விரோதிகளை தட்டிக் கேட்ட சிபிஎம் தலைவர் டி.முத்துச்சாமி மீது ஜே.சி.பி. இயந்திரத்தை ஏற்றி கொல்ல முயன்றதோடு, இன்னும் ஒரு வாரத்தில் கொல்லப்போவதாக கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக சிபிஎம் வேடசந்தூர் ஒன்றியச் செயலாளர் எம்.பெரியசாமி பாது காப்பு கோரி காவல்நிலையத்தில் மனு அளித் துள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் எம்.ஜி.ஆர். நகரில் 35 ஏழை குடும்பங்களின் வீடுகளை இடிக்க ஒரு கும்பல் ஜே.சி.பி. யுடன் வந்தனர். இது தொடர்பாக மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினருக்கு தகவல் கொடுத்தனர்.
இதனையடுத்து சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி, நாக ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்ற னர். சம்பவ இடத்தில் நாகவேல் என்பவரை யும், பெண்களையும் வீடுகளை இடிக்க வந்த சமூக விரோதிகள் தாக்கிக்கொண்டி ருந்தனர். அதை தடுக்கச்சென்ற சிபிஎம் மாவட்டச் செயற்குழு உறுப்பினர் டி.முத்துச் சாமியை மணிகண்டன் என்பவர் தாக்கினார். ஜே.சி.பி. இயந்திரத்தைக் கொண்டு ஏற்றிக் கொலை செய்ய ஜே.சி.பி. டிரைவர் முயன் றார். இதனைக் கண்டு அங்கிருந்த பெண்கள் அலறினர். அப்போது அங்கு வந்த போலீ சார் டி.முத்துச்சாமியையும். அப்பகுதி மக்க ளையும் காப்பாற்றினர்.
இது தொடர்பாக சிபிஎம் வேடசந்தூர் ஒன்றியச்செயலாளர் எம்.பெரியசாமி வேட சந்தூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத் துள்ளார். அந்த புகாரில், எம்.ஜி.ஆர்.நகர் குடியிருப்புகளை ஜே.பி.சி. இயந்திரம் கொண்டு வந்து இடிக்க வந்து எம்.ஜி.ஆர். நகர் பொதுமக்கள், பெண்கள்மீது தாக்கு தல் தொடுத்தது. அதை தட்டிக்கேட்ட சிபிஎம் தலைவர்கள் டி.முத்துச்சாமி மற்றும் நாக வேல், உள்ளிட்ட பலருக்கு கொலை மிரட்டல் விடுத்தனர். சமூகவிரோதிகளான விட்டல் நாயக்கன்பட்டியைச் சேர்ந்த தொட்டியப்பன் மகன் முருகேசன், வேடசந்தூரைச் சேர்ந்த ராமசாமி மகன் நாட்ராயன், தோப்புப்பட்டி யைச் சேர்ந்த சவடமுத்து மகன் மணிகண் டன், வேடசந்தூர் ஈகிள் ஜவுளிக்கடை உரிமை யாளர், எரியோடு கவுடா ஜூவல்லரியைச் சேர்ந்த கார்த்தி, ஜி.ஏ.பி.நகரைச் சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் நெல்சன், ஜே.சி.பி. டிரைவர் ஆகியோர் இரண்டு கார்களில் அரி வாள், பட்டாக்கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை கொண்டு வந்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச்செயற்குழு உறுப்பினர் டி.முத்துச்சாமி மற்றும் பெண்கள் மீது கொலை வெறித்தாக்குதலில் ஈடுபட முயன்றதாக புகாரில் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பல முறை எம்.ஜி.ஆர். நகர் மக்களை அங்கிருந்து வெளியேற்ற ஜே.சி.பி. இயந்திரத்துடன் வந்துள்ளனர். மேலும் இன்னும் ஒரு வாரத்தில் டி.முத்துச்சாமியை கொலை செய்து விடுவதாக எரியோடு கவுடா ஜுவல்லரியைச் சேர்ந்த கார்த்தி என்ப வன் பகிரங்கமாக மிரட்டல் விடுத்துள்ளான். எனவே வீடுகளை இடிக்க வந்ததோடு சிபிஎம் தலைவர்களை கொலை செய்துவிடுவதாக மிரட்டிய மேற்படி நபர்கள் மீது கொலை முயற்சி வழக்கு பதிய வேண்டும், சிபிஎம் தலைவர்களுக்கு தக்க பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று வேடசந்தூர் காவல்துறை அதிகாரிகளிடம் கட்சியின் வேடசந்தூர் ஒன்றி யச் செயலாளர் எம்.பெரியசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.
காவல்நிலையத்தில் மனுக்கொடுக்கும் போது மாவட்டக்குழு உறுப்பினர் ஜி. கிருஷ்ணமூர்த்தி, மற்றும் எம்.ஜி.ஆர். நகர மக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட னர். (ந.நி.)