கரூர், டிச.2 - கரூர் மாவட்டம் தோகைமலை கூட்டுறவு வங்கியின் முறைகேட்டை கண்டித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை கண்டன ஆர்ப்பாட்டம் அறிவிக்கப்பட்டது. போராட்ட அறிவிப்பை தொடர்ந்து, தோகைமலை வட்டார அலுவலர்கள் சுமூக பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இதில் கோரிக்கைகள் நிறைவேற்றப் படும் என உறுதியளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, தோகைமலை கூட்டுறவு தொடக்க வேளாண்மை அலு வலகத்தில் நடந்த சுமூக பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு களை விளக்கி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கே.சக்திவேல் தலைமை வகித்தார். மூத்த விவசாயி ரெத்தினம் பேச்சு வார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவு களை விளக்கி பேசினார். விச ஒன்றியச் செயலாளர் பெருமாள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியச் செய லாளர் ஏ.சுப்பிரமணி, விச ஒன்றியத் தலைவர் எம்.அழகேசன், விச ஒன்றி யச் செயலாளர் ஏ.முனியப்பன், ஆர். தங்கராஜ், கே.பாலகிருஷ்ணன், கே. ஆண்ட்டி, டைலர் முருகேசன் உள்ளிட் டோர் கலந்து கொண்டனர்.