தஞ்சாவூர், ஏப்.20- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி அருகே உள்ள, வீரியங்கோட்டை அட்லாண்டிக் சர்வதேசப் பள்ளியில் ஆண்டு விழா நடைபெற்றது. பள்ளி தலைவர் சீனிவாசன் தலைமை வகித்தார். பள்ளித் தாளாளர் ஜனனி முன்னிலை வகித் தார். முதல்வர் சிலம்புச்செல்வன் வர வேற்றார். ராஜீவ்காந்தி குரூப் ஆப் இன்ஸ்டிடியூஷன் தலைவர் மூர்த்தி, ஓய்வு பெற்ற மாவட்ட ஆட்சியர் காமராஜ், தமிழ்நாடு ஒருங்கிணைந்த தென்னை உற்பத்தியா ளர்கள் சங்க இணை ஒருங்கிணைப்பாளர் செல்லத்துரை ஆகியோர் சிறப்பு விருந்தின ராக கலந்து கொண்டு, பல்வேறு போட்டி களில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கள் வழங்கிப் பேசினர். தொடர்ந்து, மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் பேரா வூரணி பேரூராட்சி தலைவர் சாந்திசேகர், ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.