புதுக்கோட்டை, டிச.3 - சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முதுபெ ரும் தலைவருமான மறைந்த தோழர் என்.சங்கரய்யா படத்திறப்பு புதுக் கோட்டை மாவட்டம் அன்னவாசல் மற்றும் அறந்தாங்கியில் ஞாயிற்றுக் கிழமை நடைபெற்றது. படத்திறப்புக்கு கட்சியின் அன்ன வாசல் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர். சுப்பையா தலைமை வகித்தார். தோழர் என்.சங்கரய்யாவின் உருவப் படத்தைத் திறந்து வைத்து மாநிலக் குழு உறுப்பினர் ஐ.வி.நகாராஜன் புக ழஞ்சலி உரை ஆற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எஸ்.சங்கர், கே.சண்முகம், மாவட்டக் குழு உறுப் பினர் கி.ஜெயபாலன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அறந்தாங்கி அறந்தாங்கியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தாலுகா குழு சார்பாக படம் திறக்கப்பட்டது. படத்திறப்பு மற்றும் கட்சி பேரவைக்கு ஒன்றியச் செயலாளர் எம்.நாராயணமூர்த்தி தலைமை வகித்தார். விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலாளர் தென்றல் கருப் பையா முன்னிலை வகித்தார். கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கவி வர்மன் தோழர் சங்கரய்யாவின் உருவப் படத்தை திறந்து வைத்து பேசினார். கட்சி பேரவையில், மாவட்ட செயற் குழு உறுப்பினர் ஏ.ஸ்ரீதர் பேசினார். கட்சி யின் தாலுகா குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.