districts

அண்ணாமலை பாதயாத்திரை தமிழகத்தில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது

தூத்துக்குடி, ஆக. 16

     பா.ஜனதா தலைவர் அண்ணாமலை பாதயாத்தி ரை தமிழகத்தில் எந்த தாக் கத்தையும் ஏற்படுத்தாது என்று தொல்.திருமா வளவன் தெரிவித்துள்ளார்.

    நெல்லை மாவட்டத் தில் நிகழ்ச்சியில் பங்கேற்ப தற்காக விடுதலை சிறுத்தை கள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் சென்னை யில் இருந்து விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். விமானநிலையத்தில் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறியதாவது:-

    இந்தியா கூட்டணியை கண்டு பா.ஜனதா பயந்து உள்ளது. அனைத்து எதிர் கட்சிகளும் ஓரணியில் திரண்டு இந்தியா என்ற பெய ரில் கூட்டணி அமைத்தது காலத்தின் தேவையாக மாறி இருக்கிறது. இந்த கூட்டணி உருவானது முதல் பிரதமர் உள்ளிட்ட பா.ஜனதா தலைவர்கள் வாய்க்கு வந்தபடி பேசிக் கொண்டு இருக்கிறார்கள். அவர்களின் நாட்கள் என்னப்பட்டு கொண்டிருக் கிறது.   பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை ஊடகத்தை தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்பதற் காக ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றை பேசிக் கொண்டு இருக்கிறார். அவ ருடைய அரசியல் தமிழ் நாட்டில் எடுபடாது.

     அவர் தன்னைப் பற்றிய ஊடகம் அல்லது சமூக வலைத் தளத்தில் பேசிக் கொண்டி ருக்க வேண்டும் என்ற நிலை யில் இருக்கிறார். இது தவிர, அவரது நடைபயணத்தால் வேறு எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது. நாங்குநேரி சம்பவம் மிகுந்த வேதனைக்குரியது. ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை உள்ள  ஒவ்வொ ருவரையும் தலைகுனிய வைக்கக் கூடிய ஒரு சம்பவ மாக இது அமைந்திருக் கிறது. பள்ளி சிறுவர்கள், கல்லூரி மாணவர்கள் தங்க ளின் கல்வியில் கவனம் செலுத்த வேண்டும். அவர் களை சாதிய, மதவாதி களாக மாற்றும் கருத்துக் களை பரப்பும் அமைப்புக ளை கண்காணிக்க வேண்டி யதும், அவர்களை கட்டுப் படுத்த வேண்டியதும், தமிழக அரசின் பொறுப்பு. ஓய்வு பெற்ற நீதிபதி சந்துரு தலைமையில் அமைக்கப் பட்டு உள்ள ஆணையம், நாங்குநேரி மட்டுமின்றி தமிழகம் முழுவதும் கல்வி நிறுவனங்களில் நிலவும் இது போன்ற பிரச்சனைகள் குறித்து விரிவாக ஆராய்ந்து அரசுக்கு உரிய  வழிகாட்டுதல்களை தர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.