புதுக்கோட்டை, ஆக.9-
தவறான தகவல்களைச் சொல்லி வருகிறார் பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை என்ற மாநில சட்டத் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கூறினார்.
புதுக்கோட்டை பூங்குடியில் இருந்த தனியார் பட்டாசு ஆலையில் அண்மையில் விபத்து நிகழ்ந்தது. இந்த விபத்தில் காயமடைந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வரும் இருவரை, அமைச்சர் ரகுபதி செவ்வாய்க்கிழமை இரவு நேரில் பார்த்து ஆறுதல் தெரிவித்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், “பட்டாசு ஆலை விபத்தைப் பொறுத்தவரை முதன்முத லில் அந்த இடத்தைப் பார்வையிட்ட மாவட்ட ஆட்சி யர், கந்தர்வகோட்டை தொகுதி சட்டப்பேரவை உறுப்பி னர், திமுக மாவட்டச் செயலர் ஆகியோர் உரிய விவ ரங்களை அரசுக்குத் தெரிவித்து நிவாரணம் கொடுப்பது, சிகிச்சை அளிப்பது போன்ற பணிகளை மேற்கொண்டுள்ள னர். எதிர்க்கட்சி என்றால் ஏதாவது குறைசொல்லிக் கொண்டே இருக்க வேண்டியதுதான்.
பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை திருமயத்தில் நடைபயணம் மேற்கொண்டு பேசும்போது, என்னை நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் எனக் குறிப்பிட்டுள்ளார். அவரது பேச்சு தவறானது. என்னால் அவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியும். ஆனால், அவ ரோடு சண்டை போட்டுக் கொண்டிருக்க விரும்ப வில்லை.
எந்த வழக்கிலும் நான் தண்டிக்கப்படவில்லை. வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகத் தொட ரப்பட்ட வழக்குகளில், நீதிமன்றங்களில் நான் விடு விக்கப்பட்டிருக்கிறேன். அப்போது முதல்வராக இருந்த ஜெயலலிதா அரசியல் காரணங்களுக்காக, அந்த வழக் கில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு சென்றுள்ளார். மேல்முறையீட்டு வழக்கு மட்டும் நிலுவையில் உள்ளது” என்றார்.