districts

img

கொளுத்தும் வெயிலால் தண்ணீர் தேடியலையும் விலங்குகள்

சின்னாளப்பட்டி, மே 5-  தொடர்ந்து கொளுத்தும் கோடை வெயி லால் சிறுமலையிலிருந்து கொடைரோடு இரயில் நிலையத்திற்கு இடம்பெயர்ந்த குரங்குகள் தாகம் தீர்க்க தண்ணீரை தேடி யலையும் அவலம் உள்ளது. வனத்துறை யினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு மென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கோடைமழை பொய்த்ததால் கடந்த மூன்று மாதங்களாக கடுமையான வெயில்  வாட்டி வதைத்து, அனல்காற்றும் வீசி வரு கிறது.  இதனால் இப்பகுதியிலுள்ள குளம், ஏரிகள், நீரூற்றுகள் வற்றி நிலத்தடி நீர்  மட்டம் குறைந்துவருகிறது, பல இடங்களில்  வேளாண் பயிர்கள் கருகியும் வருவது குறிப்பிடத்தக்கது. இதனால் நாளுக்கு நாள்  அதிகரிக்கும் வெப்பத்தால் தமிழக அரசு  காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை  வெளியில் செல்ல வேண்டாம் என அறி வுறுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது,  பல்வேறு வெயில் சார்ந்த பாதிப்பு களுக்கு மக்கள் உள்ளாகி வருகின்றனர். இதற்கு விலங்குகளும் விதிவிலக்கல்ல அதிகரித்து வரும் வெயிலின் தாக்கத்தால் சிறுமலை பகுதிகளில் ஆங்காங்கே தீப்பிடித்து மரங்கள் கருகி உள்ள நிலை யில் போதிய குடிநீர் மற்றும் உணவுகள்  ஏதும் கிடைக்காததால் குரங்குகள் கொடைரோடு ரயில் நிலையம் அம்மை யநாயக்கனூர் ஆகிய குடியிருப்பு பகுதி களுக்குள் இடம் பெயர்ந்து கொடைக்கா னல்ரோடு ரயில் நிலைய பகுதிகளிலுள்ள மரங்களில் தஞ்சமடைந்துள்ளன. ஆனாலும் குரங்குகளுக்கு தேவையான உணவு மற்றும் தண்ணீர் இப்பகுதியில் கிடைக்காததால் அங்கும் இங்குமாக அலைந்து கொண்டிருக்கிறது.  இரயில் பயணிகள் உண்டு எறிந்த எச்சில் இலைகளை உணவுக்காக எடுத்து உண்ணும் நிலையும் ஏற்பட்டுள்ளது. பய ணிகள் அருந்தும் குடிநீர் குழாயில் குரங்கு கள் அமர்ந்து கொண்டு போட்டி போட்டுக் கொண்டு தண்ணீரை குடிக்கின்றனர்.  திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையினர், விலங்குகளுக்கு உணவு மற்றும் தண்ணீர் வழங்குவதற்கு தனிக் கவனம் செலுத்த வேண்டும் என்று  வனவிலங்கு ஆர்வலர்கள் மற்றும் பொது மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.