புதுக்கோட்டை, டிச.24 - புதுக்கோட்டையில் உள்ள தமிழ்நாடு கால்நடை மண்டல ஆராய்ச்சி கல்வி மையத்தில் திருநங்கைகளுக்கான கால்நடை வளர்ப்பு திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது. பயிற்சியைத் தொடங்கி வைத்து, ஆராய்ச்சி கல்வி மையத்தின் தலைவர் முனைவர் புவராஜன் கருத்துரை வழங்கினார். மேலும், நாட்டுக் கோழி பண்ணையில் குஞ்சுகள் பராமரிப்பு ப்ரூடிங் தொழில்நுட்பம், அடர் தீவனம் தயாரிப்பு, முட்டை பரிசோதனை போன்ற நேரடி பயிற்சிகளையும் அளித்தார். வான் கோழிப்பண்ணை பார்வையிடல், செம்மறி ஆடு வளர்ப்பு மறறும் பசுந்தீவனம் தயாரிப்பு பயிற்சியும் அளிக்கப்பட்டது- கோரோட் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் பத்மாவதி, திருநங்கைகளுக்கு வாழ்வில் வளம்பெற உள்ள வாய்ப்புகள் குறித்தும், லாபகரமான பால்பண்ணை அமைதிட முடியும்’ என்றும் எடுத்துரைத்தார். பயிற்சி முடிவில் 25 திருநங்கைகளுக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.