districts

img

மனநலம் பாதித்த மகனை 13 ஆண்டுக்குப் பின் தஞ்சையில் சந்தித்த ஆந்திர மாநில பெற்றோர்

பாபநாசம், அக்.18 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் பா.பிரியங்கா  பங்கஜம், கடந்த 8.9.24 அன்று பூதலூர் தாலு காவில் ஆய்வு பணி மேற்கொண்டிருந்த போது, புதுப்பட்டி கிராமம் அருகே சாலை யில் மனநலம் பாதிக்கப்பட்டு 40 வயது மதிக்கத்தக்க நபர் சுற்றித் திரிந்ததைப் பார்த்தார். உடனே ஆட்சியர், இந்தியன்  ரெட் கிராஸ் சொசைட்டி உதவியுடன் தஞ்சாவூர் ராசா மிராசுதார் மருத்துவமனை யில் இயங்கி வரும் மனநலம் பாதிக்கப் பட்டவர்களுக்கான அவசர சிகிச்சை மற்றும்  மீட்பு மையத்தில் அவரை சேர்ப்பதற்கு ஆவன செய்தார். அந்த நபர் தன்னைக் குறித்த எந்த விபரமும் தெரிவிக்கும் மனநிலையில் இல்லை.  இச்சூழ்நிலையில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்தில் தொடர் சிகிச்சை யின் வாயிலாகச் சற்று உடல்நலம் தேறிய  அவர், தனது ஊர் குறித்து தெலுங்கு தெரிந்த  செவிலியர் ஒருவரிடம் தெரிவித்தார். அதன டிப்படையில், அவர் ஆந்திர மாநிலம் அனந்தப் பூர் மாவட்டம், அம்மாவாரிப்பள்ளி கிரா மத்தைச் சேர்ந்த குஜல்லா பிரசாத் என காவல்துறை மூலம் உறுதி செய்யப்பட்டது.  அவரது தந்தை நமஞ்சி நெய்லூ, தாய்  நூரசம்மா, விவசாய குடும்பத்தைச் சார்ந்த வர் என்பதும், மனநலம் பாதிக்கப்பட்டு கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு வீட்டை  விட்டு வந்துள்ளார் என்பதும் தெரியவந்தது. அப்போது முதல் தனது மகனை அவரது பெற்றோர் பல்வேறு இடங்களில் தேடி வந்துள்ளனர்.  இந்நிலையில் அவசர சிகிச்சை மற்றும் மீட்பு மையத்திலிருந்து அவரது பெற்றோ ருக்கு புதனன்று தகவல் தெரிவித்த நிலை யில், அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள்  உடனே தஞ்சைக்கு வந்தனர். 13 ஆண்டு களுக்குப் பிறகு மகனை சந்தித்த பெற்றோர்  மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சாலையில் சுற்றித் திரிந்த தங்களது மகனை பாதுகாப்பாக மருத்துவமனையில் அனுமதித்து, உடல் நலத்தில் முன்னேற்றம் அடையச் செய்த தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யரை குடும்பத்தினர் நேரில் சந்தித்து நன்றி  தெரிவித்தனர். ஆட்சியர் பிரியங்கா பங்கஜம்,  குஜல்லா பிரசாத்துக்கு புத்தாடை மற்றும் இனிப்புகளை வழங்கி, பெற்றோருடன் அனுப்பி வைத்தார்.