தஞ்சாவூர், ஜூன் 12 - தஞ்சாவூர் மாவட்டம் பூத லூர் ரயில்வே நிலையத்தில் ஆந்திராவைச் சேர்ந்த திலீப் (26), அவரது மனைவி ஷோபா (21), இவர்களது ஐந்து மாத ஆண் குழந்தை மணிகண்டா ஆகியோர் தங்கியிருந்து, ரயிலில் கீ-செயின் விற்பனை செய்து வருகின்றனர். இந்நிலையில், திங்கள் கிழமை இரவு வழக்கம் போல், ரயில்வே நிலைய பிளாட்பார்மில் தூங்கிக் கொண்டு இருந்தனர். செவ் வாய்க்கிழமை அதிகாலை சுமார் 3:30 மணிக்கு அருகில் தூங்கிக் கொண்டிருந்த குழந்தையை காணாததால் ஷோபா, திலீப் இருவரும் அதிர்ச்சியடைந்தனர். பிறகு ரயில்வே நிலையப் பகுதி யில் தேடியுள்ளனர். ஆனால் குழந்தை கிடைக் கவில்லை. உடனடியாக, பூதலூர் காவல்நிலையத் தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த காவல் ஆய்வாளர் சிவ சுப்பிரமணியன் தலைமையி லான போலீசார் பல இடங் களில் குழந்தையை தேடி னர். அப்போது, ரயில்வே நிலையத்திலிருந்து சுமார் அரை கிலோ மீட்டர் தூரத் தில் எந்தவித பாதிப்பும் இன்றி குழந்தை கிடந்துள் ளது. உடனடியாக அந்த குழந்தையை மீட்டு அவர் களது பெற்றோரிடம் திங்கள் கிழமை காலை 6 மணிக்கு ஒப்படைத்தனர். விசாரணையில், குழந் தையை மர்ம கும்பல் கடத்த முயன்றுள்ளனர். அப்போது குழந்தை அழுததால், குழந்தையை கோழிக் கழிவுகள் கொட்டப்படும் இடத்தில் வீசி விட்டு சென் றுள்ளனர். இதை அதிகாலை நடைபயிற்சி சென்றவர்கள் பார்த்து தகவல் அளித்தனர். சுமார் இரண்டு மணி நேரத் தில் குழந்தையை மீட்ட காவல்துறையினருக்கு பெற் றோர் நன்றி தெரிவித்தனர்.