districts

பொது இடத்தை ஆக்கிரமித்த தனிநபர் நடவடிக்கை எடுக்காத மாவட்ட நிர்வாகம் குடும்ப அட்டையை ஒப்படைக்க வந்த மக்கள்

அரியலூர், ஆக.18-

     ஆதிதிராவிடர் மக்களுக்கு வழங்கப் பட்ட இலவச வீட்டு மனை பட்டாவில் தனிநபர் ஆக்கிரமிப்பு செய்துள்ளதை கண்டித்து, பாதிக்கப்பட்ட மக்கள் குடும்ப அட்டை, ஆதார் அட்டையை ஒப்படைக்க வந்தனர்.

     அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத் தைச் சேர்ந்த 23 ஆதிதிராவிட மக்க ளுக்கு இலவச வீட்டு மனை மற்றும்  பொது பயன்பாட்டிற்காக ஒரு ஏக்கர்  63 செண்டு இடம் ஆதிதிராவிட நலத் துறை சார்பில் ஒதுக்கீடு செய்யப்பட்டு, 1975 முதல் பயன்படுத்தப்பட்டு வரு கிறது.

    இதில் 1986-ல் 23 பேருக்கும் தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டு அனை வரும் வசித்து வருகின்றனர். இந்நிலை யில், அந்த 23 பேரில் ஒருவராக உள்ள கலியபெருமாள் என்பவர் தனக்காக உள்ள இடத்துடன், பொது இடத்தை 41  செண்டு வரை ஆக்கிரமித்து பயன்படுத்தி வந்துள்ளார். பொது காரி யங்களுக்கு இந்த இடத்தை பயன் படுத்தும் போதெல்லாம், இவர் பிரச்சனை செய்து வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து அப்பகுதி மக்கள்  மாவட்ட நிர்வாகத்திடம் பலமுறை புகார்  செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.  

    இதனால் அப்பகுதி காலனி மக்கள்  தனிநபர் ஆக்கிரமிப்பில் இருந்து பொது இடத்தை மீட்டு தராததை கண் டித்து, தங்களது ஆதார் அட்டை, குடும்ப அட்டைகளை ஒப்படைப்பதற்காக ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தார் அலுவலகத்திற்கு வந்தனர்.

    அப்போது அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய தாசில்தார், மற்றொரு தரப்பையும் வரவழைத்து இருதரப்பினரிடையேயும் பேச்சு வார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு எதுவும் ஏற்படாததால், இது குறித்து மேல் அதிகாரிகளுக்கு தெரி வித்து, உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.